Sunday, December 25, 2011

அன்னாவுக்கு அருமையான வாய்ப்பு

அன்னாவுக்கு அருமையான வாய்ப்பு 

ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது

இதில் அனைத்து கட்சிகளும் போட்டியிடுகின்றன

எல்லா மாநிலங்களிலும் தற்போது ஆட்சி செய்யும்
கட்சிகள் ஊழலில் திளைக்கின்றன

எனவே அண்ணாஜி அவர்கள் 
இந்த வாய்ப்பை
பயன்படுத்திக்கொண்டு 
ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தை 
தீவிரமாக செய்து 
சுயேச்சையாக 
வேட்பாளர்களை நிறுத்தி 
இந்த ஊழல் கட்சிகளை
மண்ணை கவ்வ செய்தால் 
இந்த இயக்கம் நன்றாக 
வலுப்பெறுவதோடு 
மற்ற மாநிலங்களில் ஆளும் 
ஊழல் பெருச்சாளிகளை 
வர இருக்கின்ற 
மக்களவை தேர்தலில் 
விரட்ட நல்லொதொரு 
வாய்ப்பாக அமையும் 

உண்ணாவிரதம் இருப்பதால்
தற்போது ஒன்றும் பயன் விளையாது

ஊழலை ஒழிக்க மக்களுக்கு 
விழிப்புணர்வு ஏற்கெனவே வந்துவிட்டது 
அதை சரியான வழியில் நெறிபடுத்த வேண்டும் 
அதற்க்கு தேர்தலில் வேட்பாளர்களை 
நிறுத்துவதுதான் சிறந்த வழி 

இருக்கின்ற சட்டங்களே சரிவர 
பயன்படுத்தபடுவதில்லை
அமல்படுத்த படுவதில்லை 
மக்களும் சட்டத்தை மதிப்பதில்லை 
அனைவரும் சட்டத்தை மீறி
போராட்டங்கள் தினமும்
நடத்திகொண்டிருக்கின்றனர் 
வழக்கறிஞர்கள் சட்டத்தை தங்கள்
தேவைகேற்ப வளைத்து அதை 
செயல்படாமல் தடுக்கின்றனர் 


உச்ச நீதிமன்றத்தின் உத்திரவுகளை 
மாநில அரசுகளும் மதிப்பதில்லை 
கீழ் நீதிமன்றங்களும் மதிப்பதில்லை

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மீது
உயர் நீதி மன்றங்கள் மறு ஆய்வு செய்கின்றன


மக்களின் நலனுக்காக போடப்பட 
எத்தனையோ சட்டங்கள் ஆளும் அதிகார 
வர்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளன 

இந்நிலை மாறாமல் புதிய சட்டங்களை
நிறைவேற்றுவதால் 
எந்த பயனும் இல்லை. 



No comments: