Monday, December 12, 2011

அது ஏன்?
எனக்கு புரியவில்லை

இந்திய கடற்படை சீன கப்பலை சோமாலிய கடற்கொள்ளையரிடமிருந்து
காப்பாற்றியது.-செய்தி

ஆனால் தமிழக மீனவர்களை (இந்திய மீனவர்கள் அல்ல)இலங்கை கடற்
கொள்ளையரிடமிருந்து இந்திய கடற்ப்படை காப்பாற்ற மறுப்பது  ஏன்?
மாறாக அவர்களுக்கு அறிவுரை சொல்வதும், பாதுகாப்பு தர மறுப்பதும் ஏன்?
தமிழக மீனவர்கள் இந்தியர்களில்லையா?

நம் நாட்டிற்கு எதிராக செயல்படும் சீன மக்கள் மீது பாசம் காட்டும் இந்திய கடற்படை நம் நாட்டிற்க்கு கோடி கோடியாக வரிகள், அந்நிய செலாவணி ஈட்டி தரும் மீனவர்கள் மீது ஏன் அக்கறை கொள்ள வில்லை?

தமிழர்கள் பெரிய புராணத்தில் வரும் சுந்தரர் போல் பிறப்பால் அடிமைகளோ?
இறைவனுக்கு அடிமையாகலாம் தவறில்லை
முக்தியாவது கிடைக்கும்
ஆனால் எல்லோரும் தமிழனை அடிமைகள் வாய் செத்த பூச்சிகள் என்று
எண்ணிகொண்டிருக்கிரார்களே இதற்க்கு என்ன பொருள்?

தமிழனை மற்றவர்கள் ஏமாற்றுவது  இருக்கட்டும் அது அவர்களின் புத்திசாலித்தனம்.நமக்கு இருப்பதாக நாம் நினைத்துகொண்டிருக்கும்
அது நமக்கு கிடையாது

நமக்கு உணர்ச்சிகள்தான்  முக்கியம்.அதை பயன்படுத்தி சிறிது காலம் ஸீன் காட்டிவிட்டு எல்லாவற்றையும் கொளுத்தி,உடைத்து போட்டுவிட்டு  மீண்டும் டாஸ்மாக்அல்லது வீடு அல்லது சிறை  சென்றுவிடுவோம்

உண்மைகளை உணர்ந்துகொண்டு என்று திருந்தும் தமிழ் சமுதாயம்

No comments: