Sunday, December 18, 2011

அமைதி பூவாய் இருந்த தமிழர்களை பூகம்பமாக மாற்றியது யார்?

சாத்தான் வேதம் ஓதுகிறது

மலயாளிகள் மீது தாக்குதல்-நடவடிக்கை எடுங்கள்
உம்மான் சாண்டி கடிதம்
செய்தி

இந்நிலைக்கு யார் காரணம்?

அமைதி பூவாய் இருந்த தமிழர்களை பூகம்பமாக மாற்றியது யார்?

எவ்வளவு அவமானங்கள் நடந்தாலும் பொறுமை காத்து
கேரளா மக்களுக்கு ,உண்ண உணவு,இறைச்சி,பால், காய்கறி
தந்தனர் தமிழ் மக்கள்
என்றும் இருக்க வீடு கட்ட தம நாட்டு ஆறுகளிலிருந்து
மணலை திருடி உனக்கு கடத்தி கொடுத்தும்
ஏழைகளுக்கு அளிக்கும் இலவச அரிசியினை
லாரி லாரியாக கேரளத்திற்கு
கடத்தி உதவி செய்ததற்கு நன்றியாக
முல்லை பெரியாறு அணையை உடைக்க
தீர்மானம் போட்ட கேரளா அரசின் நடவடிக்கைதான்
இதற்க்கு காரணம்

கேரளா அரசின் நன்றி கெட்ட செயலை இப்பொழுதாவது
தமிழர்களுக்கு உணர வைத்த உம்மன் சாண்டிக்கு நன்றி

இந்திய நாட்டின் மாநிலமாக இருந்துகொண்டு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காது செயல்படும்
கேரளா மாநிலம் இனி தனி மாநிலமாக இருக்கும் தகுதியை இழந்து விட்டது
அதை தமிழ் நாட்டுடன் இணைத்துவிட்டால் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும்

அய்யப்பன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவன்
அவன்  அள்ளி கொடுக்கும் தண்ணீரை தமிழகத்திலிருந்து
கோடி கோடியாய் வந்து அவனை தரிசிக்கும்
அய்யப்பன்களுக்கு அளிக்காமல் தடுக்க
கேரளத்தை ஆளும் ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் ஏது?
 
இந்த அதிகாரத்தை யார் இவருக்கு வழங்கியது?
அதற்க்கு அந்த ஐயப்பனே பதில் சொல்லட்டும்   

No comments: