Thursday, October 25, 2012

பிள்ளையார் பிடிக்க குரங்காய் போய்விட்டதே?


பிள்ளையார் பிடிக்க குரங்காய் போய்விட்டதே?





அடக் கடவுளே !
இதென்ன பிள்ளையார் பிடிக்க
குரங்காய் போய்விட்டதே?

நாம் ஆளும் கட்சி மீது 
ஊழல் புகார் சொன்னால்
இப்போது நான் செய்த 
ஊழல் வெளிகிளம்பிவிட்டதே?

நம்ம கட்சி தலைவர்  பதவியே பறி 
போய்விடும் போல இருக்கிறதே ?

அய்யா அதுமட்டுமில்லை 
நீங்கள் செய்த ஊழலால்
உங்கள் கட்சிஇனி ஆட்சியை 
பிடிக்கும் என்ற கனவும்
சேர்ந்து போய்விட்டது 

Friday, June 8, 2012

எத்தனை காலம்தான் ஏமாற்ற்றுவார் இந்த நாட்டிலே?



எத்தனை காலம்தான் 
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

இந்தியா முன்னேறிவிட்டதா?
முன்னேறியிருக்கலாம்
ஆனால் எந்த வகையில் 
என்பதுதான் என்று கேள்வி?

ஊதாரித்தனமாக  அரசு யந்திரங்கள் 
முப்பது லட்சம் செலவு செய்து 
அரசு அலுவலக கழிப்பிடங்களை 
பழுது பார்க்கின்றனர்
வெட்ககேடு


இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு 
மல ஜலம் கழிக்க பாதுகாப்பான மறைவிடம் இல்லை .
அதை முழுவதுமாக நிறைவேற்றித்தர 
அரசும் தயாராக இல்லை 
மக்களுக்கும் இந்த முக்கியமான 
சுகாதார பிரச்சினையை பற்றி 
சிந்திக்கும் அறிவும் இல்லை  

அரசு கட்டிகொடுத்த கழிப்ப்பிடங்கலோ
சரியாக பராமரிக்கப்டாமல் 
சுகாதார கேடு விளைவிக்கும்
இடங்களாக மாற்றி வைத்திருக்கும் மக்களின் 
பொறுப்பற்ற செயல் என்பதும் கண்கூடு 

ராக்கட்டுகளை வானில் விட்டுக்கொண்டு 
வாண வேடிக்கை காட்டிகொண்டிருக்கும் 
அரசுகளே ஏழை மக்களின் பாக்கெட்டை
நிரப்ப வழி வகை கண்டீர்கலேன்றால் நல்லது 

இல்லையேல் மக்களை ஏமாற்றி பிழைக்கும்
அரசியல்வாதிகள் 
உழைத்து உழைத்து
ஓய்ந்து   போயிருக்கும் மக்கள் 
உங்களை துவைத்து எடுக்கும் நாள்
வெகு தூரத்தில் இல்லை 

Tuesday, April 17, 2012

கல்லா கட்டும் பாபாக்கள்

கல்லா கட்டும் பாபாக்கள்

காவி உடை உடுத்தி ஆடம்பர வாழ்வு நடத்தும் ஸ்வாமிகள்
ஆன்மிகம் பேசி ஆடம்பர கார்களில் உலா வரும் ஆனந்தாக்கள்

மனம் முழுவதும் குப்பைகளை நிரப்பிக்கொண்டு 
அதை வெளியே அப்புறபடுத்த வழி அறியாமல் 
அலையும் மனித இனம்

பிறரை வஞ்சித்து பொருள் சேர்த்து மகிழ்ச்சியாக 
வாழலாம் என்று நினைத்து ஆப்பசைத்து மரத்தின் இடுக்கில் வால் மாட்டிகொண்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் 
தவிக்கும் குரங்குகள் போல் பலர்

சுயலாபத்திர்க்காக பலரின் வாழ்க்கையை சீரழித்து
தங்களின் சொந்த வாழ்க்கை 
பறிபோய் தவிக்கும் பலர்

மனிதர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டு
மனித நேயமற்ற செயல்களில்
ஈடு பட்டுகொண்டிருக்கும் ஒரு கூட்டம்

உலகம் முழுவதும் தன் மதம்தான் உயர்ந்தது என்று கருதிக்கொண்டு மற்ற மதத்தை பின்பற்றுபவர்களை இழிவுபடுத்துவதும், கொடுமைபடுதுவதும்,
சிறுமைபடுத்துவதும் கொன்று குவிப்பதுமாக வெறி பிடித்து
அலையும் பல கூட்டங்கள்

ஒரு பக்கம் செல்வசெழிப்பில் புரளும் மனிதர்கள்
மறுபக்கம் உணவுக்கு  வழியில்லாமல் மடியும்  கோடிக்கணக்கான மக்கள் கூட்டம்

பூவுலகை ,பாழுலகமாக மாற்றும் பாதகர் கள் பெருகிவிட்டனர்
அணு உலைகளை நிறுவி அனைவரையும் அழிக்க திட்டம் தீட்டும்
அணு வல்லரசுகள் நிறைந்து அரக்கர் கூட்டம் பெருகிவிட்டது

நம்மை வாழவைக்கும் நதிகளை நாற்றமெடுக்கும் சாக்கடையாக 
மாற்றிவிட்டனர் நாகரீகமில்லா நாசக்கார பேய் மனித கூட்டம்

நீர் வழங்கும் ஏரிகளை சேரிகலாக்கி அரசியல் துணையுடன் அசுத்த படுத்தி வருகிறது அராஜக கூட்டம் 

தெய்வங்கள் என்று போற்றி வணங்கும் பெண்களின் வாழ்வை சீரழிக்கும் 
ஈவு இரக்கமற்ற ஆண் மற்றும் பெண்கள் 

அறிவை மயக்கி அழிவு பாதையில் கொண்டு செல்லும் மது, மாது, மேனாட்டு கலாசார சீர்கேடுகள், மூட நம்பிக்கைகள், மத வாதம், தீவிர வாதம் ,கலப்படம், போலி மருந்துகள்,போதை, வாழ்வில் அனைத்திலும் புகுந்து கொண்டு நம்மையெல்லாம் அழித்தொழிக்கும், லஞ்சம், நேர்மையின்மை ,ஒழுக்கமின்மை என இன்று மானிட இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது 

இந்த மானிட இனம் இனி திருந்த வாய்ப்பில்லை 

இறைவா நீ அவதாரம் எடுத்து இவைகளையெல்லாம் சரி செய்ய விரைவில் வரவேண்டும்.
வேறு வழியில்லை 




Wednesday, April 4, 2012

தயாராக இருக்கவும்

மின் கட்டண உயர்வு-தமிழ்நாடு

வரலாறு காணாத வகையில்
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

வழக்கம்போல் எதி(ரி) கட்சிகள்கள் 
தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்க போய்விட்டன

மக்கள் என்ன செய்வார்கள்? பாவம் 
அவர்களால் என்ன செய்ய முடியும்?

ஓசியில் மிக்ஸி  மின்விசிறி  தொல்லை காட்சிபெட்டி, 
இண்டஷேன்   அடுப்பு  வாங்கிவீட்டில் ஜம்பமாக 
வைத்து கொண்டதர்க்கு  தண்டனையாக 
மின் கட்டணத்தை செலுத்தி 
தொலைக்க வேண்டியதுதான்

நடுத்தர மக்கள் தரமற்ற மின்சாரத்தை 
பெற்றுக்கொண்டு தரமற்ற தொலைகாட்சி பெட்டிகளில் 
தரக்குறைவான காட்சிகளை கண்டு அழுதுகொண்டிருப்பதோடு 
மற்ற அறிவிப்புகளையும் ரசித்து கொண்டு மின் கட்டணத்தை 
அழுவதை தவிர வேறு வழியில்லை 
வீட்டில் மின்விசிறி,பிரிஜ் தொலைகாட்சி பெட்டி, ஏசி ,வாசிங் மச்சின் 
மாவு இயந்திரம், இச்டிரிபெட்டி, தண்ணி மோட்டார் , இண்டக்ஷேன் அடுப்பு, என ஏராளமான கருவிகளை வாங்கி வைத்துள்ளதால் மாதம்500யூனிட்டுக்களுக்கு கண்டிப்பாக ஆகும்.
எதையும் இனி நிறுத்த முடியாத முடியாது. எனவே வயிற்றில் ஈர துணியை போட்டு கொண்டு மின் கட்டணத்தை செலுத்த வேண்டியதுதான் 

பிரணாப் மாமா 12.அரை விழுக்காடு சேவை வரி எல்லாவற்றிலும் போட்டு நம்மையெல்லாம் குஷிபடுதி இருக்கிறார்


வாடகைக்கு குடியிருப்போர் இனி நடு தெருவுக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை

கையாலாகாத அரசியல்வாதி களை நம்மை மேய்க்க  அனுப்பி வைத்தால் அவர்கள் அரண்மனையில் உல்லாசமாக பவனி வருவதும், ஆடம்பரமான கார்களில் சுற்றி வந்து பந்தா காட்டுவதும் மக்களை ஏமாற்றி திரிவதும் வாடிக்கையாகிவிட்டது
.
இதற்க்கு காரணம் மக்கள் தங்கள் பிழைப்பு எப்படியாவது நடந்தால் போதும் என்று ஒவ்வொருவரும் நினைப்பதுதான். இந்த துன்பத்திற்கு காரணம் .

எல்லாவற்றையும் மொத்தமாக தண்டம் அழுதுவிட்டு மகிழ்ச்சியாக கோவணத்தை கட்டி கொண்டு கிளம்பிவிடலாம். தயாராக இருக்கவும்  

மின்சாரத்தை இலவசமாக வாரி இறைக்கும் இந்த அரசியல்வாதிகளால் ஆளப்படும் அரசுகள் வோட்டு வங்கிக்காக அதை என்றும் நிறுத்த போவதில்லை

தொடர்ந்து தரமான மின்சாரத்தை வழங்க எந்நேரமும் எல்லா பிரிவினருக்கும் வழங்க நடவடிக்கை அரசுகள் என்று எடுக்கும் என்று யாருக்கும் தெரியாது

மின்கட்டணத்தை ஒவ்வொரு மாதமும்  செலுத்த அரசு மக்களுக்கு 
உதவி செய்தால் 500 யூனிட்டுக்களுக்கு மேல் ஆகும் மின்சார அதிர்ச்சியிலிருந்து மக்கள் தப்பிக்க உதவியாய் இருக்கும்

இந்த உதவியையாவது மாண்புமிகு முதல்வர் செய்தால் மக்கள் அவரை வாழ்த்துவார்கள் 

செய்வாரா?

Monday, March 19, 2012

எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான்

பணம் ஏராளமாக இருக்கிறது வாழ்க்கையை நடத்த அனைத்து வசதிகளும் இருக்கிறது உதவி செய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள் எல்லாம் இருந்தும் இன்று பல கோடி பேர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கும் எல்லாம் இருந்தும் ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை? மனதின் போக்கை சரியாக புரிந்துகொள்ள இயலாமையால் மனம் போன போக்கில் மீளமுடியாத தவறான் பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி பெரும்துன்பதிர்க்கு ஆளாகிவிடுகிறார்கள். தன் முட்டாள்தனத்தினால் விளைந்த செயல்களுக்கு பிறர் மீது குற்றம் செலுத்தி தனி மனிதர்கள் அனைவருக்கும் கேடு விளைவிக்கிறார்கள் அதை போன்ற எண்ணம் கொண்ட சில நாடுகளின் தலைவர்கள் மற்ற நாடுகளின் மீது போர் தொடுத்து கோடிகணக்கில் பணத்தை வீணடித்து, லட்சகணக்கில் மக்களை கொன்று குவித்து உலகில் அமைதியை குழி தோண்டி புதைக்கிறார்கள். முடிவில் அவர்களும் புதையுண்டு போகிறார்கள். ஆனால் அவர்கள் தோற்றுவித்த அழிவுகள் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் . இதுபோன்ற மன நோயாளிகளின் போக்கிற்கு காரணம் சுயநலம்தான். அவர்களிடம் கூட்டு சேரும் அதுபோன்ற சில மனிதர்களும்தான் இந்த நிலைமைக்கு காரணம். எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான் அதில் உள்ள எண்ணங்கள்தான் காரணம் அது இந்த உலக பொருட்கள் மீது இன்பத்தை தேடுகிறது உயிரற்ற பொருட்கள் இன்பத்தை எப்படி தரமுடியும் என்று யாரும் யோசிப்பதில்லை அழகிய உயிருள்ள பூனைக்குட்டியோ நாய்க்குட்டியோ தரும் இன்பம் தங்க நகைகளோ வைர நகைகளோ தர இயலுமா? அழகிய உயிருள்ள குழந்தையின் ஒவ்வொரு அசைவும் மழலையும் தரும் மட்டற்ற இன்பம் ஒரு பொம்மை தர இயலுமா? பிணமாகிவிட்டால் பணமோ இந்த வசதிகளோ நம்முடன் வருமா என்பதை ஒவ்வொருவரும் தினமும் ஒரு கணமாவது சிந்தித்து பார்க்கவேண்டும் உயிருடன் இருக்கும்போதே அனைவருடன் அன்போடு பழக வேண்டும் வேதனையை தரும் வெறுப்பை நீக்க வேண்டும் பிறர் மனம் நோகும்படி வார்த்தைகளை கூறாமல் பிறர் மீது புறங்கூறாமல், பிறருக்கு துன்பம் விளைவிக்காமல், பிறர் சொத்துக்களை .அபகரிக்காமல் , இல்லாதவருக்கு உதவுவதும், பிறர் துன்பங்களை நீக்க பாடுபடுவதும் துன்பங்களையும், ஏமாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள பழகிகொள்வதும், எல்லாம் வல்ல இறைவன் மீது நம்மையும் இந்த உலகையும் படைத்த இறைவன் மீது எப்போதும் நம்பிக்கை வைத்து அகந்தையில்லாமல் வாழ்க்கை நடத்த பழகி கொண்டால் எந்நிலையிலும் கவலைகள் இல்லாமல் வாழலாம். இவ்வுலகில் அமைதி தவழ நம்மை படைத்த இறைவனை தினமும் காலையில் கண் விழித்ததும் பிரார்த்தனை செய்வோம.

Friday, March 16, 2012

முகர்ஜியின் மூக்கறுக்கும் பட்ஜெட்

முகர்ஜியின் மூக்கறுக்கும் பட்ஜெட்

12 விழுக்காடு சேவை வரி
12 விழுக்காடு கஸ்டம்ஸ் டியூட்டி
ஏற்கெனவே பெட்ரோல்,டீசல், சமையல் 
எரி வாயு கட்டணம் ஏற்றியாகிவிட்டது
ரயில்வே கட்டணங்கள் உயர்த்தபட்டுவிட்டன


தமிழகமுதல்வர் ஏற்கெனவே பஸ் கட்டணம்,
பால் கட்டணம் உயர்த்தி மக்களை மகிழ்வித்துவிட்டார்
மின்சாரம் இல்லாமல் தமிழ்நாடு நாசமாய் 
போய்கொண்டிருக்கிறது 
இதை சரிபடுத்த யாருக்கும் நாதியில்லை
மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டுகொண்டு 
வெத்துவேட்டு அறிக்கைகளை விட்டுகொண்டு 
வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறது 


எல்லா பொருட்களும் விலை உயர்ந்து 
எந்த உயரத்திற்கு செல்லும் என்று யாருக்கும் தெரியாது 


தங்கத்தின் மீது வரி போட்டு அதை இன்னும் அதிக உயரத்திற்கு
கொண்டு சென்றுவிட்டார்


ஆனால் இன்னும் மக்களுக்கு தங்கம் மீது மோகம் குறையவில்லை 
எல்லாவற்றையும் போட்டு தங்க நகைகள் வாங்கி சங்கிலி அருப்பன்களுக்கு கொடுப்பதில் அவர்களுக்கு அலாதி பிரியம்


இல்லாவிடில் வீட்டில் ஓட்டை இரும்பு பீரோவில் வைத்து திருடர்கள் எடுத்துகொள்ள வழி வகை செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி


கேரளா நகை வியாபாரிகள் நம்மிடம் நகைகளை விற்றுவிட்டு மீண்டும் அவர்களே நகை கடன் தருகிறேன் என்று அந்த நகைகளை அபேஸ் செய்வதற்கு வழி வகுக்கும் முட்டாள் தமிழ் மக்கள் 

லட்சகணக்கில் பிணமாய் போன ஈழ தமிழர்களுக்கு கண்ணீர் வடிக்காத  
தமிழர்களின் ஒரே,ஒப்பற்ற தலைவர் ஒரு கட்டிடம் இடம் மாற்றுவதற்கு 
தீக்குளிப்பேன் என்று ஒப்பாரி வைக்கிறார்
.
மத்திய அரசு இலங்கை போர் குற்றங்கள் தீர்மானத்திற்கு 
ஆதரவாக நிச்சயம் ஒன்றும் செய்யபோவதில்லை

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத ஆடுகள் 
தங்களுக்குள்ளே சண்டையிட்டுக்கொண்டு
மந்தை மந்தையாய் சாகும் மாடுகள் 

எந்த காலத்திலும் இவர்கள் எதற்கும் ஒன்று சேரபோவதில்லை
தனி தனியாக புலம்புவதும் பொது சொத்துக்களை அழித்து தங்கள் எதிர்ப்பை காட்டி பின்பு  அடங்கி போவதும்தான் இவர்கள் இதுவரை செய்த சாதனை. 



Saturday, March 10, 2012

கிளி பேச்சு கேட்கவா?

Parrot by forbesimages
கிளி பேச்சு கேட்கவா?








கிளியை வைத்து என்னென்ன செய்யலாம்?


கூண்டில் அடைத்து வைத்து
கிளி ஜோசியம் சொல்லி
காசு பார்க்கலாம்
அதற்கென்றே மதுரை 
வாழ் மக்கள் இருக்கிறார்கள்

பாவம் அவகளுக்கு கிளியை வைத்து 
அப்படி என்ன சம்பாதித்து விட முடியும்?
இருந்தும் அவர்கள் அதை வைத்து 
பலவகையில் குழம்பி போயுள்ள மக்களுக்கு
மிகவும் மலிவான விலையில் 
ஆறுதல் தந்து கொண்டு தங்கள்
பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறார்கள்

கிளி நாம் நாட்டு  கலாசாரத்தில் நன்றாக ஊறி விட்டது
சுகர் என்ற மகரிரிஷி முகம் கிளி வடிவாக உள்ளது
அவர் பெயரில் மனிதர்களின் எதிகால பலன்களை
சொல்லும் சுகர் நாடி உள்ளது 
அதை சொல்பவர்களும் இருக்கிறார்கள்
அவருக்கு பக்தர்களும் இருகிறார்கள்

திருப்புகழ் அருணகிரிநாதர் தன பூதஉடலை 
சம்பந்தாண்டான் என்ற 
காளி உபாசகர் அழித்துவிட்டபோது
கிளி உடலில் தாங்கி  கந்தரனுபூதி என்ற 
பாடல்களை பாடியதாக வரலாறு


மதுரை மீனாக்ஷியும் ,ஆண்டாள் நாச்சியாரும் 
தங்கள் கையில் கிளியை தாங்கி கொண்டு 
காட்சி தருகிறார்கள்  


அழகான பெண்ணை பச்சைக்கிளி என்றும் 
அழகாக தமிழ் பேசும் பெண்ணை
பைந்தமிழ் பேசும் பசைக்கிளி என்றும் 
கிளியை வளர்த்து பூனையிடம் கொடுக்கவா என்றும் 
கிளி பற்றிய பல செய்திகள் உண்டு

ஆனால் இன்று சொல்லப்போகும் 
செய்தி என்ன வென்றால் 
ஒரு நபர் அந்தமான்  கிளி வளர்க்க 
ஆசைப்பட்டு வலைத்தளம் மூலம் 
இருபதாயிரம் ரூபாய் ஏமாந்த கதைதான்
.
கிளி வாங்க இவர்  விரித்த வலையில் 
கிளி விழவில்லை
இவர்தான் வலையில் 
விழுந்துவிட்டது பரிதாபகரமானது.


ஏமாற்றுவதில்தான்  எத்தனை வகை ?
தலை சுற்றுகிறது. 

Friday, March 9, 2012

தேர்தல்களும் தேறுதல்களும்

தேர்தல்களும் தேறுதல்களும் 

5மாநிலங்களில் சட்டசபைக்கு தேர்தல்கள் நடந்து 
முடிந்து விட்டன 


ராகுல் காந்தி கடுமையாக பிரசாரம் மேற்கொண்டு மாயாவதிக்கு எதிராக 
ஊழல்  குற்றச்சாட்டுகளை கூறியதால் மட்டும் அவர் ஆட்சியை இழந்திருக்க வாய்ப்பில்லை 
அவர் தம் ஆட்சி காலத்தில் மக்களின் வறுமை நிலையை முன்னேற்ற 
நடவடிக்கை எடுக்காமல் தனக்கு சிலை வைப்பதில் காட்டிய ஆர்வகோளாறு அவருக்கு ஆட்சி பறிபோய்விட்டது 


முலாயம்சிங்  தன மகனை முன்னிறுத்தி ஆட்சியை பிடித்துவிட்டார்
அவராவது உருப்படியாக செய்யபோகிறாரா என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம்

பாஜ க வழக்கம்போல் மக்களின் வாழ்க்கைதரம்  மேம்படுத்துவதை பற்றி சிந்திக்காமல் சொதப்பியதால் உருப்படியாக ஒன்றும் சாதிக்கவில்லை

காங்கிரஸ்சில் தலைவர்கள்  நிறைய இருப்பதால் 
தேர்தலில்தோற்றுவிட்டதாக அதன் தலைவர் சொதப்பியிருக்கிறார்
அந்த கட்சியில் பல மாநிலங்களில் தொண்டர்களை விட தலைவர்கள்  அதிகம் என்பதை மக்கள் எல்லோருக்கும் முன்பே  தெரியும் 

பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலில் சிக்கி 
ஒவ்வொருவராக கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் அந்த கட்சி
விலைவாசியை கட்டுபடுத்த வக்கில்லாத கட்சி,
நாடெங்கும் கொள்ளை நோய் என பரவிவரும் தீவிரவாதத்தை கட்டுபடுத்த இயலாத கட்சி 
நாட்டில் மாநிலங்களுக்கிடையேயான நீண்ட  கால நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யாமல் 
அவற்றின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் கட்சி
,
 பல முக்கிய பிரச்சினைகளை தீர்க்க 
கையாலாகாத நிலையில் 
பல புளுகுமூட்டைகளை தினம் தினம் 
அவிழ்த்து விட்டு கொண்டு வரும் நிலையில்
 பல்வேறு காரணங்களை கூறி 
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டு 
கதை விட்டு கொண்டிருக்கின்றது
மத்தியில் ஆளும் கட்சி. 


மக்கள் அனைத்தையும் 
நன்றாக அறிவார்கள் 


கூடிய சீக்கிரம் அந்த கட்சிக்கு நிரந்தரமாக ஓய்வு இந்திய மக்கள் கொடுத்துவிடுவார்கள் .

Thursday, March 8, 2012

The Government is for the people of the people by the people.

The Government is for the people 
of the people  by the people.

But nowadays the government is 
buying the people by distributing freebies
during election and run the government 
after winning the election with the same technique
 .
This is followed by all the successive governments.
with increased freebies at the
cost of taxpayers and law abiding citizens.

The so called poor who receive the 
maximum benefits are not contributing 
to the society as expected.and improve their way of life 

Because they receive everything free 
they waste their precious earnings 
on liquor ,and destroys their family and 
they continue to live on poverty
and then started blaming the government

TV channels ,cinemas, politicians 
always keep the masses under their 
control by brainwashing and changed their character
to blindly follow them for their selfish ends.

This bad practice has spread all over India like a decease
Masses are always emotional in approach and react to
any small incident provoked by the anti social elements 
and politicians and religious fanatics engage
themselves in destroying public properties and creating
social unrest between castes and religious followers.

The riches become richer and the poor becomes poorer 
thus the gap between them is widened day by day 
Haves and have nots gave way to corruption, 
exploitation  ,increase of anti social activities 
which make the  governments cannot go with their 
developments
.
This situation should be changed for the welfare of all 

Thursday, February 23, 2012

தமிழ்நாட்டில் வங்கி கொள்ளையர்களை உயிரோடு பிடிக்காமல் அனைவரையும் கொன்றுவிட்டது முறையா?

தமிழ்நாட்டில் வங்கி கொள்ளையர்களை
உயிரோடு பிடிக்காமல் அனைவரையும்
கொன்றுவிட்டது முறையா?

why this kolaveri kolaveri di?

இன்று தமிழ் நாட்டில் பல லட்சம் ரூபாய்களை பட்ட பகலில் 
கொள்ளையடித்த வங்கி கொள்ளையர்களை கண்டுபிடித்து 
விட்டதாக காவல் துறை அறிவித்த சில மணி நேரத்திலேயே 
அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்ததை அனைவரும் 
பாராட்டும் வேளையில் அவர்களை உயிரோடு பிடிக்காமல் 
அனைவரையும் அவசர அவசரமாக் கொன்று அப்புறப்படுத்தியது
அனைவரின் உள்ளத்திலும் பல்வேறு சந்தேகங்களை 
ஏற்படுத்தியுள்ளது

சிங்கம் புலி யானை போன்ற கொடிய மிருகங்களை பிடிக்க 
துப்பாக்கியில் மயக்க மருந்து நிரப்பப்பட்ட ஊசியை செலுத்தி 
பிடிக்கின்றனர்.

அதுபோல் கொள்ளையர்களில் ஒருவரையாவது உயிரோடு 
பிடித்திருக்கலாம்
அல்லது அவர்கள் தங்கியிருந்தஅறையில் மயக்கத்தை தரும்
வாயுக்களை செலுத்தி அவர்கள் மயங்கி விழுந்த பின் 
அவர்களை பிடித்திருக்கலாம்

அவர்கள் ஒருவர் கூட உயிரோடு இல்லாமல் போனதால் 
அவர்கள் உண்மையில் கொள்ளையர்களா என்பதே கேள்விக்குறியாக
உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் ஐயம் எழுப்பியுள்ளனர்

மேலும் கொள்ளை தொடர்பாக சுட்டு கொள்ளப்பட்டவர்களோடு தொடர்புடையவர்களின் தகவல்களை சுலபமாக அறிந்து கொள்ள
கிடைத்த வாய்ப்பை காவல்துறை இழந்துவிட்டது மிகவும்
துரதிஷ்டவசமானது

இனிமேலாவது இது போன்ற குற்றவாளிகளை நவீன யுக்திகளை
பயன்படுத்தி உயிருடன் பிடித்து விசாரிக்க உரிய ஏற்பாடுகளை 
காவல் துறை மேற்கொள்ளவேண்டும். 

திருடர்களை கொல்வதால் மட்டும் திருட்டுக்கள் என்றும் குறையபோவதில்லை.

காவல்துறையினரின் அறிவுரைகளை காற்றில் பறக்க விட்டு 
கண்காணிப்பு காமிராக்களை நிறுவாமல்,ஆயுதம் தாங்கிய காவலாளிகளை நியமிக்காமல், பொதுமக்களின் பணம், மற்றும், நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை உரிய முறையில் பாதுகாக்க ஏற்பாடு செய்யாத வங்கிகளின் உரிமையாளர்களும், அதற்க்கு பொறுப்பானவர்கள் மீதும் சட்டம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொதுமக்களும் இனி எச்சரிக்கையாக் இருக்கவேண்டும்
எதற்க்கெடுத்தாலும் காவல் துறையையே குற்றம் சாட்டுவது 
ஏற்கெனவே ஆட்கள் பற்றாக்குறை, ஓய்வின்றி வேலைப்பளு அரசியல் தலையீடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களின் மனோ பலத்தை அது நிச்சயம் பாதிக்கும். 

Wednesday, February 22, 2012

All must correct themselves to correct the corrupt


CORRUPTION-A VIRUS OF HUMAN MINDS

When we all are corrupt 
then why put the  blame on 
certain quarters of the society only?

First the PEOPLE  are corrupt.

They have no patience to wait till their turn comes.
Hence they tend to find out an easy route to get things done.
They lure the concerned even though the person is refusing 
to do the favour.in the first instance.but it becomes a habit.in the wrong run. 
The politicians are minting lakhs of rupees for all the posts filled by Govt
from the job seekers.whatever may be their merit. 
The news spread and others follows suit..
The person who is addicted of extracting money for doing favors 
fails to distinguish between the haves and have-nots.which sparks problems.
When his  next superiors find that his subordinate 
is collecting huge bribes,he instigate them to part of 
their income to them.and so on it moves from bottom to top 
and then to the Minister concerned. 
After seeing all these things, the politicians,
 petition writers, anti social elements are also 
start extracting money from these persons
and finally they  become full pledged corrupt

To continue their business in the same place they bribes their
higherups and the area politicians.
The politicians will never distribute their allotments of funds 
to their area by the government without getting sizable commission
from the contractors who are going to do the work. 
to which the officials cannot reject.
Everybody know it but they wont voice any protest it.
because after deducting al commissions, still they can earn  
something by doing substandard work. 

The welfare schemes are so technically planned that 
if  a beneficiary has to get the assistance they have to produce
various certificates to be issued by various departments, 
and in certain cases certificate from politicians also,
enable them to fill up their coffers.
for giving false certificate in several cases relating to agelimit, 
educational qualification,time limit, income certificate,
caste certificate.etc.etc.

So the corruption is rampant in all and 
there is no use of pointing out one finger against somebody 
when three fingers are pointed towards the pointer. 

All must correct themselves to correct the corrupt 

Wednesday, February 8, 2012

(ஆ )பாசப்பறவைகள்

(ஆ )பாசப்பறவைகள் 

கர்நாடக  சட்ட  மன்றத்தில்  மூன்று  மந்தி (ரிகள் )கள் 
சட்டசபை  நடைபெறும்போது  அந்த  நடவடிக்கைகளில் 
பங்கேற்காமல்  பாசத்துடன்  மூன்று பேரும் 
ஆபாசப்படங்களை  கண்டு  மகிழ்ந்துகொண்டிருப்பதை 
ஊடகங்கள்  வெளிச்சம்  போட்டு  காட்டி  விட்டன 

மூன்று  மந்திரிகளில்  ஒருவர்  பெண்கள்  மற்றும்  குழந்தைகள் 
நல  அமைச்சராக  இருப்பது  மிகவும் கேலிக்குரியது 

பாரதீய  ஜனதா  கட்சி  சட்ட மன்ற  உறுப்பினர்கள் 
இது  போன்ற   தரக்குறைவான  செயல்களில்  ஈடுபடுவது 
அந்த  கட்சிக்கு  பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது 
வருந்ததக்கது  

காதலர் தினம், மற்றும் புப்  கலாசாரத்தையும் சாடும் அக்கட்சியின் ஒரு 
பிரிவினர் இந்த அசிங்கத்திற்கு என்ன பதில்வைதிருக்கின்றனரோ  தெரியவில்லை

இனிமேலாவது  மக்கள்  ஒழுக்கமுள்ள 
அரசியல்வாதிகளை  தங்களை  ஆள  தேர்ந்தெடுக்க  முயற்சி 
செய்ய வேண்டும் 
.
அரசியல்வாதிகளின்  பகட்டுகளையும் 
பொய்யான  வாக்குறுதிகளையும்  நம்பி  
மோசம்  போகாமல் 
புத்திசாலிதனமாக  என்றுதான் 
மக்கள் செயல்ப்டபோகிரார்களோ  தெரியவில்லை ?

Tuesday, January 24, 2012

லொள்ளு தாங்கமுடியவில்லை

இனியும் தாங்காது 
இந்த கண்ணா மூச்சி ஆட்டம் 

லொள்ளு தாங்கமுடியவில்லை

கூடங்குளம் அணுமின்நிலையம் 
அமைக்க செலவு 14ஆயிரம் கோடிக்கு மேல்
ஒரு தனி மனிதன் ஒரு சிறு கூட்டத்தை 
வைத்துகொண்டு அதை 
திறக்க விடாமல் செய்கிறார்

பல கோடி மக்கள் பயன் பெறும் திட்டத்தை 
செயல்படாமல் தடுக்க அவர் மாநில, மத்திய
அரசுகளையே மிரட்டுகிறார் 

அணுமின்நிலையம் திறக்க ஆதரவு 
எத்தனையோ போராட்டங்கள் 
தமிழ்நாடு முழுவதும் 
நடந்து ஓய்ந்து விட்டன
ஒன்றும் பயன்படவில்லை/
எடுபடவில்லை 

நம் நாட்டில் மக்களுக்காக  
மக்களின் நன்மைக்காக ஆளுகின்ற அரசு என்று 
ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை 

சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள்,
 மாநிலங்களவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், 
முதலமைச்சர், பிரதம மந்திரி, ஜனாதிபதி 
என்று ஏராளமான கூட்டம் இருந்தும் 
ஒரு தனி மனிதனை கண்டு பயந்து 
மக்களுக்கு பயன் படும் திட்டத்தை 
கிடப்பில் போட்டு வைத்திருப்பதின்  மர்மம் என்ன 
என்று யாருக்கும் புரியவில்லை

தினந்தோறும் வாய்சொல் வீரர்களின் 
வெத்து வேட்டு அறிக்கைகள்
நாளிதழில், தொலைகாட்சியில் பெயர் வந்ததும் 
அடுத்த அறிக்கை விட தயாராகிவிடும் அரசியல்வாதிகள்

தமிழ்நாட்டு மக்களே.இந்திய மக்களே 
உங்களுக்கு விடிவுகாலமே கிடையாதா?

நீங்கள் என்றுதான் செயல்படவைக்கும் 
தலைமையை தேர்ந்தெடுக்க 
துணிவீர்கள்?

எரிகின்ற கொள்ளியில் எந்த கொள்ளி சுமார் 
என்றுதான் ஒவ்வொரு தேர்தலிலும் 
ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டிய 
கட்டாய சூழ்நிலையை உருவாக்கியது யார்?

சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது 


இலவசங்களை பெற்றுக்கொண்டு 
ஐந்து ஆண்டுக்கொருமுறை அடிமைசாசனம் 
எழுதி கொடுப்பதற்குத்தான் நீங்கள் பிறந்திருகிறீர்களோ ?

அப்படியானால் நீங்கள் இருந்தும் ஒன்றுதான்
இல்லாததும் ஒன்றுதான் 


Tuesday, January 10, 2012

தமிழ்நாட்டை இரண்டு பேய்கள் பிடித்து ஆட்டுகின்றன

பேய்களை யார் ஒட்டுவார்கள் ?

தமிழ்நாட்டை இரண்டு பேய்கள் பிடித்து ஆட்டுகின்றன

ஒன்று கூடங்குளம் பேய்
மற்றொன்று முல்லை பெரியார் பேய் 

கூடங்குளம் பேயை தமிழ்நாட்டின் மீது ஏவியிருப்பவர்
உதயகுமார் என்னும் மந்திரவாதி

அவர் மகுடிக்கு கட்டுப்பட்டு அவருடன் 
சேர்ந்துகொண்டு சில மாதங்களாக 
பலநூறு பேய்கள் ஆடிக்கொண்டு இருக்கிறன 
திரும்ப திரும்ப அந்த பேய் அணு உலை ஆபத்தானது 
அதனால் மக்கள் மடிந்துவிடுவார்கள்,
எல்லாம் அழிந்துவிடும் என்று 
அந்த பேய் திரும்ப திரும்ப் 
சொல்லிகொண்டிருக்கிறது 

அந்த பேயை ஓட்ட மத்திய அமைச்சர் நாராயணசாமி,
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போன்றவர்கள்
முயற்சி செய்து தோற்று போய் 
அவர்கள் வேலையை 
பார்க்க போய்விட்டனர் 

அணுஉலை பேய் இன்னும்
பயங்கரமாக உறுமி கொண்டிருக்கிறது

பேயை விரட்ட தலைமை பூசாரியான தமிழக முதல்வர் 
அவர் கோரிக்கைகளுக்கு பிரதம  மந்திரி செவி சாய்க்காததால்
இந்த பேயை அதன் போக்கில் ஆட விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறார் 


மற்றொரு பேய் முல்லை பெரியார் அணை பேய்


அதை தமிழ்  நாட்டின் மீது ஏவி விட்டிருப்பவர் 
மலையாளா மாந்த்ரீக மந்திரவாதி உம்மன் சாண்டி

அணை உடைந்து விடும் அதனால் லட்ச கணக்கில் மக்கள் செத்துவிடுவார்கள் என்று கோயபெல்ல்ஸ் புளுகு மூட்டையை அவிழ்துவிட்டுகொண்டு ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறார்

அந்த பேயை ஓட்ட தமிழக முதல்வர்,
 முன்னாள் முதல்வர், 
எதிர் கட்சி தலைவர்கள், 
பொது மக்கள் என பலர் முயற்சி செய்தும்
 ஒன்றும் நடக்கவில்லை
சாண்டி பேய் நாளுக்கு நாள் சண்டித்தனம் 
செய்துகொண்டு நிலைமையை 
சிக்கலாக்கிகொண்டிருக்கிறது

அந்த பேயை அடக்கவேண்டிய 
பிரதம மந்திரி பேயுடன் கூட்டு சேர்ந்துகொண்டு 
களி சாப்பிட்டுகொண்டு கதகளியை ரசித்துகொண்டிருக்கிறார் 

பாவம் தமிழ்நாட்டு மக்கள் 
அவர்கள் என்ன செய்வார்கள் 
புலம்புவதை தவிர வேறு வழி இல்லை 

   
பாரதி அன்று: எங்கெங்கும் காணினும் சக்தியடா 

இன்று: எங்கெங்கும் காணினும் குப்பையடா


இன்று தமிழ்நாட்டில் குப்பைகள் இல்லாத இடமேயில்லை 
மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தனி தனியே பிரித்து போட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டும் அதை காற்றில் பறக்கவிட்டு விட்டு கண்ட இடங்களில் குப்பைகளை வீசி எறிவதில் நம் நாட்டு மக்களுக்கு இருக்கும் ஆனந்தம் வேறு எதுவும் இல்லை 


மக்கும் குப்பை எது மக்காத குப்பை எது என்று தமிழ் நாட்டு மக்குகளுக்கு (மக்களுக்கு) என்று புரியபோகிறதோ தெரியவில்லை 


முக்கியமாக அவர்கள் குப்பைகளை போட தேர்ந்தெடுக்கும் இடம் கழிவுநீர் கால்வாய்கள், குப்பை தொட்டிகளின் வெளிப்புறத்தில், பேருந்து மற்றும், ரயில் வண்டி பாதைகள், நிலையங்கள், ,என எல்லா இடங்களிலும் குப்பைகளை போடுவது அவர்கள் இயல்பு. 
படித்தவன், பாமரன் என அனைவரும் இந்த விஷயத்தில் ஒன்றாக செயல்படுவது பாராட்டத்தக்கது


இதனால் எல்லாஇடங்களிலும் கழிவு நீர்தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை எல்லா நேரங்களிலும் பதம் பார்க்கின்றன

மக்களை வீடுகளிலேயே முடக்கி வைக்கின்றன
ஜன்னல் கதவுகளை திறந்து இயற்க்கை காற்றை 
சுவாசிக்க வழியில்லை
கதவை திறந்தால் துர்நாற்றமதான் வீசுகிறது


கொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசு விரட்டிகளுக்காக
பல நூறு ரூபாய்களை மாதம்தோறும் அழவேண்டி உள்ளது


அதை தவிர நோய்களில் மாட்டிகொண்டு மருத்துவ செலவு 
பல ஆயிரங்கள் அழுதும் இந்த மனித ஜன்மங்கள் 
கொஞ்சம் கூட பாடம் கற்றுகொள்வதாக தெரியவில்லை

ஆனால் என்ன துன்பபட்டாலும் 
குப்பைகளை கண்ட இடங்களில் வீசி எறிந்து 
மகிழும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை
என்பது தமிழ் நாட்டு மக்களின் ஏகோபித்த  கருத்து 

Monday, January 9, 2012

மருத்துவர்களின் இந்த போராட்டம் எந்தவிதத்தில் நியாயம்-சிந்திப்பீர்

மருத்துவர்களின் இந்த போராட்டம் 
எந்தவிதத்தில் நியாயம்-சிந்திப்பீர் 


தூத்துக்குடியில் மருத்துவர் கொலை :

காரணம்: சிகிச்சைக்காக அதிக பணம் செலவழித்தும் 
தன மனைவி ,குழந்தையை காப்பாற்றாமல் அறுவை சிகிச்சை செய்யும்போது பிரச்சினை ஏற்பட்டு வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கையில் மரணம் .அந்த சோகமும், வேதனையும் கொலையில் முடிந்திருக்கிறது .இது ஒரு தனிபட்ட நிகழ்வு.

இதுபோன்ற நிகழ்வுகள் நம் நாட்டில் ஏராளமாக நடக்கின்றன. ஆனால் கொலை செய்யும் அளவிற்கு யாரும் செல்வதில்லை. மறியல்,வழக்கு என்று செல்வதை தவிர.

இந்த நிகழ்வில் சம்பத்தப்பட்ட மருத்துவர் இந்த குறிப்பிட்ட 
அறுவை சிகிச்சையை செய்ய தகுதி பெற்றவர் அல்ல 
என்பது தற்போது வெளியாகி இருக்கும் செய்தி. இவர் போன்றவர்கள் பணம் சம்பாதிப்பதர்க்காக செய்த முறையற்ற செயல் 
அவர் உயிரை பலி வாங்கி விட்டது

இதுபோல்தான் தமிழ் நாட்டில் ஒரு மருத்துவர் தகுதி பெறாத தன மகனை அறுவை சிகிச்சை செய்ய வைத்து விளம்பரம் பெற நினைத்து  வம்பில் மாட்டிகொண்டார்

இன்று அனைத்து மருத்துவர்களும் வீதியில் 
இறங்கி போராடுகிறார்கள் 
தங்களுக்கு பாதுகாப்பு கோரி


யார் யாருக்கு பாதுகாப்பு தருவது? 
ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அளித்தாலும் 
வரும் மரணத்தை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது
அவரவர் நேர்மையும்,நன்னடத்தையும் பிற உயிர்களிடம் அவர்கள் காட்டும் அன்பும் பரிவும்தான்  அவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து 
பாதுகாப்பு பெற்று கொடுக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் 



அது சரி  இவர்களிடமிருந்து அப்பாவி நோயாளிகளுக்கு
 யார் பாதுகாப்பு அளிப்பது?


நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?
உங்கள் மனசாட்சியை கேளுங்கள் பதில் கிடைக்கும் 

மருத்துவமனைகளில் நடக்கும் ஊழல்கள், அத்துமீறல்கள், பகல் கொள்ளைகளை நாடே அறியும்,
மருந்து தயாரிக்கும்நிறுவனங்கள் பரிசோதிக்கும் கருவிகள் ,ரத்தம் மலம் மற்றும் பலவிதமானஆய்வு கூட உரிமையாளர்கள், மருந்தகங்கள் ஆகியவர்களோடு மருத்துவர்கள்  சேர்ந்துகொண்டு கமிஷன் அடித்து அந்த தொகையை நோயாளிகளின் தலையில் கட்டுவதையும் மக்களும்  அறிவர், ஏன் அவர்களும் அறிவர்ர்கள்

தேவையில்லாமல்,பரிசோதனைகள் செய்ய வைத்து பல ஆயிரம் முதல் லட்சம் வரை மக்களின் இயலாமையை பயன்படுத்தி காசு பறிக்கும் பகல் கொள்ளையர்களின் மீது உள்ள ஒட்டுமொத்தமான ஆத்திரம்தான் தூத்துக்குடி கொலை 

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறியாதீர்கள் மருத்துவர்களே 
மக்கள்கோபம் உங்கள்மீது திரும்பினால்  நீங்கள் இருக்கும் இடத்தில கட்டிடம் இருக்காது, நீங்களும் இருக்கமாட்டீர்கள். வெறும் கற்கள்தான் இருக்கும்.

நேர்மையாக வாழுங்கள் உங்கள் சேவையால் மக்கள் நெஞ்சங்களில் வாழ முயற்சி செய்யுங்கள். ஆடம்பரமாகமருத்துவமனைகளை கட்டி கொள்ளையடிப்பதைவிட்டு.விட்டு   

Sunday, January 8, 2012

நாட்டு மக்களின் நலனில்; அக்கறையில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

நாட்டு மக்களின் நலனில்; அக்கறையில்லாத 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

120கோடி மக்களின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வழிவகைகளை ஏற்படுத்தி தர அனுப்பிவைக்கப்பட்ட நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் ஒவ்வொரு கூட்ட தொடரிலும் நடந்துகொள்கின்ற விதம் அறுவருக்கதக்கும் படியாகவும் முகம் சுளிக்க கூடியதாகவும் இருக்கிறது

இந்நிலை தொடர்ந்து சில ஆண்டுகளாக நீடித்து வருவது கவலைக்குரியதாகவும் ஜனநாயகத்தை கேள்விக்குரியதாகவும் ஆக்கிகொண்டிருக்கிறது

இதில்  ஆளும் கட்சியும் எதிர் கட்சிகளும் சூதாட்டம் நடத்திக்கொண்டு மக்களின் வரிப்பணம் கோடிகணக்கான ரூபாய்களை வீணடித்துகொண்டு வருகின்றன 

இதை தவிர பல லட்சம் கோடிகணக்கான ரூபாய்களை ஊழல் செய்து ஆளும்  கட்சி அமைச்சர்களும், துறை அதிகாரிகளும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பகல் கொள்ளைஅடிக்கும் வர்த்தக நிறுவனங்களும் மக்களை மோசடி செய்து மகிழ்ச்சியாக உலா வருகின்றனர்.

மக்களோ நாளுக்கு நாள் ஏமாற்றப்பட்டு,தினம் தினம் துன்பங்களை அனுபவித்து கொண்டு ஏதும் செய்வதறியாது அல்லல் பட்டுகொண்டு வருகின்றனர்

இந்த அழகில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏராளமான சலுகைகள்.இலவசங்கள் தொகுதி நிதியில் கமிஷன் என ஏராளமான வருமானங்கள் இவ்வளவையும் பெற்றுக்கொண்டு தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களின் முன்னேற்றதிர்ற்கு எதுவும் செய்யாமல் ராஜ போக வாழ்க்கை வாழுவது மக்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும்


தங்கள் தொகுதியில் மாநில அரசுகளால் நிறைவேற்றமுடியாத அதிக நிதி தேவைப்படும் திட்டங்களை நிறைவேற்ற எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுப்பதில்லை. தங்கள் தொகுதி நிதியில்  ஒரு சில கட்டிடங்களையோ  அல்லது ஒரு சில சாலை பணிகளையோ நிறைவேற்றுவதோடு ஒதுங்கிகொள்கின்றனர். 


தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றதிற்கு சென்ற பிறகு எந்த உறுப்பினரும் மக்களை சந்திப்பதே கிடையாது.அப்படி சந்தித்தால் அது இரவு நேர கட்சி கூட்டமாகத்தான் இருக்கும் 
 . 
அவர்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி மக்கள் குறைகளை கேட்பதும் கிடையாது

அப்படி பெற்றுகொண்டாலும் அவைகள் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கபடுவதோடு . அவைகள் மீது முறையான தீர்வு கிடையாது.


 மக்கள் அவர்களை சந்திக்க நகரத்திற்கு வந்து காத்து கிடக்க வேண்டும் அவர்களின் ஆதரவாளர்களை மீறி யாரும் அந்த குறுநில மன்னரை  சந்திக்க முடியாது. இந்நிலை என்று மாறுமோ தெரியவில்லை?.


மன்னராட்சி ஒழிந்தது. ஆனால் இன்று  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமான மன்னர்கள் மக்களிடையே தன் சகாக்களுடன் ஆடம்பரமாக  வலம் வந்துகொண்டு இருக்கின்றனர்

அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஐந்தாண்டுக்கொருமுறை தன் அறியாமையாலும், வறுமையினாலும் சில இலவசங்களை அவர்களிடம் பெற்றுக்கொண்டு தங்கள் வாக்கை அவர்களுக்கு கொடுத்துவிட்டு வழக்கம்போல் மக்கள் முட்டாள்களாகி தன் தலைவிதியை நொந்துகொண்டு நடைபிணம்போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் 




இனிமேலாவது மக்களவையிலோ ,மேலவையிலோ மக்களுக்கு பயன்படும் படியான நடவடிக்கைள் ஏதும் மேற்கொள்ளாமல் கூச்சலும் குழப்பமும் விளைவித்தால் அன்றைய தினத்திற்கான செலவுகள்,படிகள் ஆகியவற்றை கணக்கிட்டு உறுப்பினர்களின் படியிலிருந்து அன்றே வசூல் செய்து அரசு கணக்கில் சேர்க்கவேண்டும்

கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு தண்டனையும் விளையாட்டுகளில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரர்களுக்கு அபராத தொகை  விதிப்பது போல்,  அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றவேண்டும்

அப்படி செய்தால் நாடு உருப்படும். நாட்டு மக்களுக்கும் நன்மை ஏற்படும்  

உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது. மக்களின் ஆதங்கத்தை
வெளிபடுத்தாமல் இருக்கவும் முடியாது.ஆனால் உண்மை இதுதான்  

Saturday, January 7, 2012

தொடர்ந்து மக்களை ஏமாற்றி மக்களை சுரண்டி வாழும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தால்தான் இந்தியா உருப்படும்

காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் அறிக்கை
 :
ஊழல் குற்றச்சாட்டால் மாயாவதி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பாபுசிங்  குஷ்வாகா காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்தார் ஆனால் ஊழல் கறை படிந்த எந்த ஒரு நபரையும் சேர்த்துக்கொள்ள  மாட்டோம் என்பதை அவரிடம் தெளிவாக தெரிவித்துவிட்டோம் அவர் சிறைக்கு செல்ல வேண்டியவர் இப்படிப்பட்ட நபரைத்தான் பா ஜ தலைவர்கள் .தங்களுடம் சேர்த்துக் கொண்டுள்ளனர்

போபோர்ஸ் பீரங்கி  ஊழலின் வாரிசுக்கு பிறந்தது
ஊழலை பற்றி  பேசுவது வேடிக்கையாக உள்ளது
ஒருவேளை எங்களிடமே ஏராளமான ஊழல் பேர்வழிகள் இருக்கிறார்கள் நீங்கள் வேறு எதற்கு என்று என்ற எண்ணத்தில் அப்படி சொல்லியிருக்கலாம்  

அலைகற்றை ஒதுக்கீட்டில் பல லட்சம் கோடி ருபாய் ஊழல் செய்து மாட்டிகொண்டு சில அமைச்சர்கள் கம்பி எண்ணி கொண்டிருக்கிரார்கள்
இன்னும் சிலர் உள்ளே போக போகிறார்கள்

பங்கு சந்தை ஊழல்,காமன்வெல்த் விளையாட்டு ஊழல்என்று ஏராளமான ஊழல்களின் ஊற்றுகண்ணான காங்கிரஸ் கட்சி ஆட்சியின் லட்சணம் உலகம் முழுவதும் சந்தி சிரித்து கொண்டிருக்கிறது

ஆண்ட அறுபது ஆண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றிய ஊழல்களின் மதிப்பு கணக்கிலடங்காதவை 

கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைத்துள்ள பணமும் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது

சில பேர் மாட்டிகொள்ளாமல் மேல்லோகம் போய்விட்டார்கள்

9ஆண்டுகளுக்கு முன் ஊழல் செய்து மாட்டிகொண்ட சுக்ராம் தற்போதுதான் சுகமாக கம்பி எண்ண போயிருக்கிறார்

தொடர்ந்து மக்களை ஏமாற்றி மக்களை சுரண்டி வாழும் காங்கிரஸ் கட்சி
ஒழிந்தால்தான் இந்தியா உருப்படும்




Friday, January 6, 2012

தானே புயலுக்கு பின்னே?

தானே புயலுக்கு பின்னே?

புயல் அடித்து சென்று விட்டது
வாழ்வாதாரங்களை முழுவதுமாக சுவடு தெரியாமல் அழித்துவிட்டது

இன்னும் அதை நினைத்து புலம்புவதை மக்களும் நிறுத்தவேண்டும்
எதிர் கட்சிகளும்,ஊடகங்களும் நிறுத்தவேண்டும்

அரசை குறை கூறுவதை விட்டுவிட்டு எதிர்கட்சிகளும் ,ஊடகங்களும் அரசுடன் சேர்ந்து மக்களுக்கு உதவி செய்வதுதான் தற்போதைய 
கடமை. மற்ற அரிப்புகளை  தேர்தலின்போது வைத்துகொள்ளலாம் 


உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து மக்களின்
வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த குறுகிய மற்றும் நீண்ட கால
மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு துரிதப்படுத்த வேண்டும்

வெறும் நிதி மட்டும் வழங்கினால் அதில் பாதி லஞ்ச பேர்வழிகளுக்கும் மீதி டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கும், சாராய வியாபாரிகளுக்கும் போய்விடும் மீதி தொகையை மக்கள் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடுவார்கள். 

பயிர் வேலைகளை தொடங்க நிலம் மேம்பாடு,செய்ய,இடுபொருட்கள் வழங்க, மின் சக்தி வழங்க உடன் ஏறபாடு செய்ய வேண்டும் 


புயலால் விழுந்து போன ஆயிரகணக்கான மரங்களை அப்புறபடுத்த, வனத்துறையினரின் யானைகளையும் போகலைன்   இயந்திரங்களையும் பயன்படுத்தினால் விரைவில் இந்த பணியை முடிக்கலாம்



பார பட்சம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் தங்கள் இழந்த தொழிலை தொடங்க தேவையான உதவிகளை செய்ய வேண்டும்



Thursday, January 5, 2012

பாரதி அன்றும் இன்றும்

 பாரதி அன்றும் இன்றும் 


அன்று:  கல்வியில் சிறந்த தமிழ்நாடு 


இன்று : கலவியில் சிறந்த தமிழ்நாடு 


                  செய்தி: பள்ளி ஆசிரியர் மாணவியிடம் பாலியியல் துன்புறுத்தல்
                                    எல்.கே ஜி மாணவியிடம் தலைமை ஆசிரியை மற்றும்     
                                   ஆசிரியை பாலியல் துன்புறுத்தல் -குற்றத்தை மறைக்க  
                                    மருத்துவர் உடந்தை-புகார்

இதுபோன்ற பாலியல் கொடுமைகள்  வீட்டிலும் வெளியும் தினம் நடந்து கொண்டிருக்கின்றன .மருத்துவ மனைகள், அலுவலகங்கள்,மாணவர் விடுதிகள்,ஓடும் ரயிலில் ,காவல் துறை என தினமும் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. 


சமூக அவமானம் கருதி அனேக பெண்கள் இதை வெளியில் சொல்லுவதுமில்லை குற்றவாளிகளை காட்டி கொடுப்பதுமில்லை ஏனெனில்புகார் அளித்தால்  குற்றவாளிகளை விட பாதிக்கபட்டவர்கள்தான் அதிக துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கபடுகின்றனர் .


உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி கடுமையான சட்டங்கள் நிறைவேற்றியும் அவைகளை நிறைவேற்ற எந்த அரசுகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. பொதுமக்களும் அக்கறை காட்டுவதில்லை. 


பத்திரிகை துறையும், திரைப்பட துறையினரும் ,தொலைகாட்சி ஊடகங்களும் இந்த விஷயத்தை தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுதிகொள்வதில் காட்டும் அக்கறை பாதிக்கப்பட்டவர்களில் மறுவாழ்வுக்கோ அல்லது குற்றவாளிகள் உரிய தண்டனை பெறுவதற்கோ அக்கறை காட்டுவதில்லை 


திரைபடங்களில் பெண்களின் உடலழகை மிகைபடுத்தி ஆபாசமாக சித்தரிப்பதில் அனைத்து தயாரிப்பாளர்களும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர். பாடலாசிரியர்களும் அவர்கள் பங்குக்கு ஆபாச பாடல்களை எழுதி காசு பார்க்கின்றனர். 


சின்ன திரையும் அவர்களைவிட பல மடங்கு பெண்களை இழிவு செய்யும் காட்சிகள் ஒவ்வொரு தொடரிலும் இணைத்து மக்களின் ரசனையை கெடுத்து அவர்கள் மனதில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் செய்துவிட்டனர். 


இதை எந்த மாதர் அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை 


பெண்களை இழிவுபடுத்துவதில் ஆண்களை விட பெண்களின் பங்கே 
அதிக அளவு இருப்பதால் இந்த பிரச்சினையில் அவர்கள்தான் 
முதலில் திருந்த வேண்டும் 







Wednesday, January 4, 2012

மக்களின் துன்பங்களுக்கு யார் காரணம்?

மக்களின் துன்பங்களுக்கு யார் காரணம்?

மக்களா அல்லது 
மக்களை குழப்பும் அரசியல்வாதிகளா அல்லது
மக்களை ஆளும் அரசுகளா?

உண்மையில் மக்களின் துன்பங்களுக்கு காரணம் மக்களே

நம் நாடு சுதந்திரம் அடைந்த பின் 
எல்லாவற்றிற்கும் ஆளும் அரசுகளையும் அரசு இயந்திரங்களையும் 
குறை சொல்லுவதே இயல்பாகி போய்விட்டது

எதற்கெடுத்தாலும் அரசு இயந்திரத்தை எதிர்பார்ப்பதே 
தீராத வியாதிஆகிவிட்டது 

எந்த பிரச்சினைகளிலும் ஒருவொருக்கொருவர்
உதவி செய்து கொள்ளும் மனப்பான்மை செத்துவிட்டது

வெளியிலிருந்து உதவி கிடைக்கின்றவரை 
தங்களிடம் இருக்கின்றவற்றை 
இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் தூய 
மனப்பான்மை அடியோடு அற்று போய்விட்டது 

தங்களுக்கு தேவையானதை மட்டும்
வைத்துகொண்டு 
இல்லாதவர்க்கு வழங்குவதும் 
இருப்பதை அனைவரும் பகிர்ந்து கொண்டு 
வாழும் உத்தம குணம் இன்று யாரிடமும் இல்லை
  
சுயநலம் காரணமாக அரச வழங்கும் உதவிகளை 
அனைவருக்கும் பகிர்ந்து அளிக்காமல் 
ஒரு சிலரே அனுபவிப்பதால் 
பெரும்பாலான மக்கள் துன்பத்தில்
 சிக்கி தவிக்கிறார்கள்

பொதுமக்களிடம் பொறுமை இல்லை,
சகிப்புத்தன்மை இல்லை, 
நேர்மை இல்லை, ஒழுக்கம் இல்லை .
அதனால்தாம் மக்கள் தொடர்ந்து 
துன்பங்களை அனுபவிக்கிறார்கள் 

மக்களின் இந்த மனோபாவம் மாறவேண்டும்.
மாறினால்தான் அனைவருக்கும் நல்லது
இல்லையேல் அவர்களும் நிம்மதியாக வாழமுடியாது
அவர்களை ஆளும் அரசுகளும் நல்ல அரசாட்சியை வழங்க முடியாது.

தேவையா இந்த போலி சுதந்திரம்

தேவையா இந்த போலி சுதந்திரம்?

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொன்னார்கள்

எல்லோரும் சரிசமம் என்று சொன்னார்கள்

எல்லா உரிமைகளும் கிடைக்கும் என்று சொன்னார்கள்

வறுமை நீங்கி வாழ்வு வளம் பெரும் என்று சொன்னார்கள்

எல்லோரும் கல்வியறிவு பெறலாம் என்று சொன்னார்கள்

எல்லோருக்கும் சட்ட பாதுகாப்பு கிடைக்கும் என்று சொன்னார்கள்

ஆனால் என்ன நடக்கிறது?

நாடு முன்னேறியுள்ளது


ஆனால் நாட்டு மக்கள் முன்னேறினார்களா  என்பதுதான் கேள்வி?


பல கோடி மக்கள் அடிப்படை தேவைகளை கூட
பெற இயலாது தவிக்கின்றனர் 
என்பதை யாரும் மறுக்கவோ 
மறைக்கவோ முடியாது 


சாராயமும், மதுவும் நாட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது

பணக்காரன் வெளிநாட்டு சரக்கு குடிக்கிறான்

ஏழை குடலை அழிக்கும் சாராயத்தையும்,
விஷ சாராயத்தையும் குடித்து
தானும் அழிந்து தன குடும்பத்தையும்
நிர்க்கதி ஆக்குகிறான்

கல்வி பணக்காரர்களுக்கே கிடைக்கிறது
ஏழை குழந்தைகள் கல்வியறிவு
பெறமுடியாமல் தத்தளிக்கின்றனர்

பலகோடி பேர் வேலை வாய்ப்பு  அலுவலகத்தில்
பல ஆண்டுகள் பதிவு செய்தும்
வேலை கிடைக்கவில்லை

மேற்கத்திய கல்வி முறையால் மாணவர்களிடம்
மன அழுத்தம்தாம் அதிகமாகியுள்ளது 
ஒரு சின்ன பிரச்சினையை கூட எதிர்கொள்ளும் 
மன உறுதி அவர்களுக்கு இல்லை
.
குடிக்கிறார்கள், புகையிலை போதைக்கு
அடிமையாகி தங்களை வாழ்வை
 நாசமாக்கிகொள்ளுகிரார்கள் அழிதுகொள்ளுகிரார்கள்.
சினிமா,மற்றும் அரசியல் பிசாசுகளிடம் சிக்கி
தங்கள் எதிகாலத்தை கேள்விகுறியாக்கி கொள்ளுகிறார்கள்

வீட்டிலும் பாதுகாப்பில்லை,
வெளியிலேயும்  பாதுகாப்பில்லை.
வீட்டை பூட்டிவிட்டு சென்றால் 
அன்றே கொள்ளை போகும் 
அனைத்து பொருட்களும்.
தடுத்தால் உயிர் போகும் 
அது இரவானாலும்,பகலானாலும் சரி
.
வெளியில் சென்றால் வழிப்பறி கொள்ளை

வயதான பெண்கள்,தனியே இருக்கும் பெண்கள்
எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம்,
கொலை செய்ய படலாம்
பாலியல் தொல்லைக்கு உட்படுத்தபடலாம்

பெண் குழந்தைகளுக்கு பள்ளியிலும் பாதுகாப்பில்லை.
ஆசிரியர்களே பாலியியல் தொல்லை தருகிறார்கள் 
கல்வி  கற்பிப்பதை விட்டு கலவியை பற்றி பேசுகிறார்கள்.

நிம்மதியாக தொழில் செய்ய
அரசும் விடுவதில்லை
சமூக விரோதிகளும் விடுவதில்லை.
தொழிலுக்கு தேவையான், மின்சாரம்,
கட்டமைப்பு வசதி ஒன்றும்
சரியாக கிடைப்பதில்லை

தினம் தினம் வரிகள் மக்களின் மீது திணிக்க படுகின்றன
மனிதன் பிறப்பிலிருந்து மண்ணிற்குள் போகும்வரை எல்லாவற்றிலும் வரி விதித்து மக்களை கொடுமைபடுத்தும் மாநில, மத்திய அரசுகள் 

விவசாயிகள் பாடு திண்டாட்டம். அவர்களை வாழ வைக்க எந்த அரசுகளும் முயற்சி எடுப்பதில்லை மாறாக அவர்களை தற்கொலைக்கு தூண்டி பல லட்சம் பேர் மாண்டுபோயிருக்கிரார்கள்

ஆனால் சமூக விரோதிகளும், லஞ்ச பேர்வழிகளும், கள்ள கடத்தல்காரர்களும், அரசியல்வாதிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் மக்களை சுரண்டி கொழுத்து கோடீஸ்வரர்களாகி உள்நாட்டில் பணத்தை பதுக்கியது போதாதென்று வெளிநாட்டு வங்கிகளிலும் பதுக்கி வைத்துள்ளார்கள் 

ஒன்று அல்லது   இரண்டு பேர் வாழும் பணக்காரர்களுக்கு பல பங்களாக்கள் பல கோடி ரூபாயில் 

உழைத்து ஓடாய் போகும் பல கோடி மக்களுக்கு இருப்பிடம்,நடைபாதையில்

உழைப்பவர்களுக்கு அனைத்தும் காசு கிடைத்தால் தான் கிடைக்கும்

ஆனால் இவர்களை ஆட்சிசெய்யும் அரசியல்வியாதிகளுக்கு அத்தனையும் இலவசம் 


இது போதாதென்று அவர்கள் ஊழல்  செய்து மக்களுக்கு துரோகம் செய்து மக்களை ஏமாற்றி பல தலைமுறைக்கு சுருட்டும் பணம் பல லட்சம் கோடி


நாட்டில் எங்கு பார்த்தாலும் மோசடிகள்,எதிலும் மோசடிகள்.மக்களை ஏமாற்றிபணம் பறிக்கும் கும்பல்ஸ் இல்லாத இடமே இல்லை


நீதித்துறை தூங்கி வழிகிறது
காலத்திற்கு ஒவ்வாத சட்ட பிரிவுகள்
நிரபராதிகளை விட குற்றவாளிகளுக்குதான் 
சாதகமான சட்ட பிரிவுகள் லட்சகணக்கான வழக்குகள் 
பல்லாண்டுகளாக தேக்கம்


கொடுமையான குற்றவாளிகளுக்கும் 
தண்டனை நிறைவேற்ற முடியாத அளவில் 
தவறான போராட்டங்கள்  

தினம் தினம் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள்  சாலை மறியல், வன்முறை பொது சொத்துக்களை சூறையாடுதல் காவல்துறை அடக்குமுறைகள்,துப்பாக்கி சூடுகள், உயிரிழப்புகள் இல்லாது ஒரு நாளும் விடியாது.மக்களின் அல்லல்களுக்கு அளவே இல்லை

மக்களை குழப்பும் பல நூறு அரசியல் கட்சிகள், மத வெறியர்கள்

மக்களின் எந்த பிரச்சினையும் தீர்க்காத கையாலாகாத மாநில,மத்திய அரசுகள்

எவ்வளவு காலம்தான் இந்நிலை நீடிக்கும்? 
என்று நம் நாட்டு மக்கள் நலமாக வாழ போகிறார்கள்? 
என்று சுயநல அரசியல்வாதிகள் ஒழிந்து
நம் நாட்டு மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்






Tuesday, January 3, 2012

தானே வந்து தமிழகத்தை பதம் பார்த்த தானே புயலின் கோர தாண்டவம் முடிந்து விட்டது





தானே வந்து தமிழகத்தை பதம் பார்த்த தானே புயலின் கோர தாண்டவம் முடிந்து விட்டது 

அது விட்டு சென்றது பேரழிவு

எடுத்துசென்றது பல உயிர்களை

வாழ்வதற்கே வழியில்லாது அனைத்து 
ஆதாரங்களையும் அழித்து விட்டது
கோர புயல் 

மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் ,என்ன செய்வதென்று
புரியாமல் கலங்கி நிற்கின்றனர்

பொறுப்பற்ற மத்திய அரசு தமிழ்நாடு அரசு அறிக்கை கிடைத்தவுடன்
மத்திய குழு பார்வையிட்டு நிதி வழங்கும் என்று அறிக்கை விடுகிறது

தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக மின் இணைப்புக்களை சரிசெய்து குடிநீர் வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது

அனைத்து சேதங்களுக்கும் முன்னுரிமை  அளித்து இழப்பீடு தொகைகளை அறிவித்துவருகிறது

சாலைகள் முழுவதுமாக அழிந்துவிட்டதால் எந்த உதவிகளும் பல நூறு கிராமங்களுக்கு பல நாட்களாகியும் போய் சேரவில்லை .

இந்தியாவில் பல மாநிலங்களில் ஆண்டுதோறும் புயல் தாக்கி சேதங்களை ஏற்படுத்தி வருவது வாடிக்கை .இது மாநில அரசுகளுக்கும் தெரியும் ,மத்திய அரசுக்கும் தெரியும்

தற்போதுள்ள அதி நவீன தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட இடத்திற்கு செல்லாமலே அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளும் வசதிகள் இருந்தும் அரசு நிர்வாகம் தூங்குகிறது

மொத்தமாக அழிந்துவிட்டபிறகு கணக்கெடுப்பு எதற்கு?

முதலில் உயிர் பிழைக்க உதவிகள் அளிக்கப்படவேண்டும் 
பிறகு பார்த்துகொள்ளலாம் மற்ற உதவிகளை 
.
வழக்கம்போல் எதிர்கட்சிகள் தங்கள் சுய விளம்பரதிற்க்காக 
தங்கள் பங்குக்கு இடங்களை பார்வையிடுவதும் 
ஆளும் கட்சிக்கே எதிராக அறிக்கைகள் விடுவதும் 
வழக்கமான ஒன்று.இப்போதும் அதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள் 
அதைத்தவிர அவர்களுக்கு வேறொன்றும் தெரியாது 
அவர்கள் என்றும் திருந்தபோவதும் கிடையாது .

அனைத்தையும் இழந்த மக்கள் தங்களை நிலைபடுத்தி கொள்ளும் வரை அவர்களுக்கு தினமும், உணவு, குடிநீர், மருத்துவ வசதி, தற்காலிக தங்கும் வசதி ஆகியவையே உடனடி தேவை.


முதலில் இந்த பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் 


இந்த பணியில் தொண்டு நிறுவனங்கள் பல ஈடுபட்டு வருவது பாராட்டுதலுக்குரியது  

அதை அரசு இயந்திரங்கள் உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்று மக்கள் எதிர்பார்கிறார்கள்

அதற்க்கு, ஹெலிகாப்டர்கள், ராணுவம், போன்ற வசதிகளை பயன்படுத்தி அரசு நிர்வாகங்கள் உடனடி நடவடிக்கையில் இறங்காவிடில் மக்களின் கோபம் எதில் போய் முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும்.


Monday, January 2, 2012

பெண்ணே எல்லாம் ஆவதும் உன்னாலே
அழிவதும் உன்னாலே 

பெண்ணே நீ தேவதை 
ஆம் தேவதையாய் இருக்கும் வரை ஆராதிக்கபடுவாய்
அதுவரை ஆராதிப்பவரையும் பாதுகாப்பாய்
நீயும் பாதுகாப்பாய் இருப்பாய்

ஆனால் நீ மானிடராய் பிறந்துவிட்டால் ?

மேடுகளும் பள்ளங்களும் கொண்ட வடிவம் நீ
உன் வாழ்க்கையும் அவ்வாறே மேடு பள்ளங்கள்
கொண்டதாக ஆகிவிட்டதோ?

உன் தோற்றமும் அழகு,பார்வை அழகு, பேச்சு அழகு, உன் செயல் அழகு
அனைத்தும் அழகே உருவெடுத்த நீ அனைவரையும் உன்பால்
கவர்ந்திழுக்கிறாய்

அதுவே உன் பலம் அதுவே உன் பலவீனம்

உன்னில் சிலர்  இந்த உலகை ஆட்டி படைக்கின்றனர்

ஆனால் உன்னில் பெரும்பான்மையினர் அல்லல்படுவதர்க்கே
பிறவி எடுத்துள்ளதை காணும்போது உள்ளத்தில் ரத்தம் வடிகிறது 

ரத்தம் செய்து பிரசவித்த உன் படைப்புகள் உன்னை போகபோருளாக கருதி உன்னை ரத்தம் கக்க செய்து உன் வாழ்க்கையை சீரழிக்கும் மிருகங்களை 
யார் திருத்துவது ?  

அதனால்தான் என்னவோ நீயே உன்னை உன் கருவில் இருக்கும்போதே கருக செய்து இவ்வுலகிற்கு வரவிடாமல் தடுத்துவிடுகிறாயோ? 

இந்தியர்களே எச்சரிக்கை

அந்நிய  நாட்டு வணிகர்களை இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதிப்பது பற்றி

வணிகம் செய்ய வந்த வெள்ளையர்கள் 
இங்குள்ள தேச துரோகிகளின் துணையோடு 
கொள்ளையர்களாக   மாறி
நம் நாட்டை கொள்ளையடித்து 
நம் நாட்டையே கைபற்றிகொண்டு
நம்மை அடிமைகளாக ஆக்கி
நம் கலாசாரத்தை சீரழித்து 
நாம் நாட்டு பாரம்பரியமான
விவசாய முறைகளையும்
சிறு தொழில்களையும் அழித்து 
நம் மக்களை வறுமைக்குள் தள்ளி
நம் உரிமைகளை பறித்து
நாம் முன்னேற விடாமல் 
பலவிதமான கொடுமையான 
சட்டங்களை போட்டு 
இருநூறு ஆண்டுகளுக்கு மேல் 
நம்மை துன்புறுத்திய ஆங்கிலேயர்களை 
மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் 
பல்லாயிரம் பேர் உயிர் தியாகம் 
செய்து பெற்ற சுதந்திரத்தை 
இழக்கும் விதமாக மீண்டும் அவர்களை 
நம் நாட்டில் வணிகம் செய்ய 
காங்கிரஸ் தலைமையிலான அரசு 
முடிவு எடுத்திருப்பது 
தற்கொலைக்கு சமானமானது 

இதன் காரணகர்த்தா யார் என்பதை அனைவரும் அறிவர் 

காந்தி இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு காங்கிரஸ் கட்சியை கலைத்து விட சொன்னதை அக்கட்சியில் உள்ள கொள்ளை கூட்டம் ஏற்க்க மறுத்ததின்  விளைவுதான் இன்று நம் நாடு சந்திக்கும்
தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளுக்கும் காரணம் 

இன்று ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடம் இல்லையே தவிர இன்னும்
அந்த கூட்டம் நம்மை அடிமைகளாக வைக்க ஆட்சி செய்த அதே
முறையைத்தான் இன்றளவும் இன்றைய ஆட்சியாளர்கள்  கடைபிடித்து வருகின்றனர்

நாட்டில் எங்கும் வறுமை, ஏழை மக்களை சுரண்டி வாழும் அதிகார வர்க்கம்
பாதுகாப்பின்மை மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ உறுதியற்ற சூழ்நிலை என எண்ணற்ற தீராத பிரச்சினைகள்

எனவே இந்திய மக்கள் இதற்க்கு அனுமதித்தால் அவர்களை காப்பாற்ற இன்னொரு காந்தி இப்போது பிறக்கமாட்டார். அதற்க்கு முன்னூறு அல்லது நானூறு ஆண்டுகள் ஆனாலும் ஆகலாம். 

ஏற்கெனவே பன்னாட்டு பன்னாடை நிறுவனங்கள்    நம் நாட்டில் உள்ள அனைத்து தொழில்களிலும் நுழைந்து பல லட்சம் கோடிகள் சுருட்டி கொண்டு
கொழித்து வருகின்றன

இந்தியர்களே எச்சரிக்கை