Sunday, December 25, 2011

யார் அந்த வைத்தியன்?

இந்திய மக்களுக்கு எதிரிகள் யார்?

இந்திய மக்களுக்கு எதிரிகள் அவர்கள்
தங்களை ஆள தேர்ந்தெடுக்கும்
மக்கள் பிரதிநிதிகளே

தேர்ந்தெடுத்த பின் அவர்களை அயிந்து ஆண்டுகள்
தங்களை ஏமாற்றி கொள்ளையடிக்க லைசென்ஸ்
கொடுப்பதும் அவர்களே

இப்படியாக ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றி மாற்றி
அயோக்கியர்களை தேர்ந்தெடுத்து தங்களை சுரண்டி
வாழுமொரு மாபெரும் கூட்டத்தையே உருவாக்கி கொண்டதுதான்
இன்று அவர்கள் கண்ட பலன்

தேர்தல்போது நாய்க்கு வீசும் எலும்பு துண்டுகள் போல் .காசு, இலவசங்கள் போன்றவற்றை பெற்றுக்கொண்டு தொடர்ந்து துன்பம் அனுபவிப்பதையே
இன்பமாக கருதும் இந்திய மக்களை யார் மாற்றுவது?
தவறும் செய்யும் அரசியல்வாதிகளை யார் திருத்துவது?

யாராவது ஊழலை பற்றி வாய் திறந்தால் போதும் அவர்கள் மீது சரமாரியாக
பல் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி  மக்களை திசை திருப்பும் அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து மக்களை யார் காப்பாற்றுவது?

லஞ்சம் கொடுத்தே பழகிப்போன மக்கள்,அதை வாங்கியே கொழுத்த
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், மற்றும் அரசையும் மக்களையும் பலவிதங்களில் ஏமாற்றி கோடி கோடியாய் சுருட்டும் வணிகர்களும், வணிக நிறுவனங்களும் ,என இந்தியா முழுவதும்
புற்றுநோய் பரவிவிட்டது

இன்று இந்திய நோயாளியின் உடலில் உயிர் இருக்கிறது
நோயை குணபடுத்த சரியான சுயநலமற்ற
உறுதியான நல்ல மனம் கொண்ட வைத்தியன் தேவை
யார் அந்த வைத்தியன்?
 



No comments: