Wednesday, December 14, 2011

இந்த குளறுபடிகளை யார் சரி செய்ய போகிறார்கள். ?

இந்தியா ஆங்கிலயரிடமிருந்து 15-8-1947அரசியல் சுதந்திரம் பெற்றது

அதனால் யாருக்கு லாபம்?
அரசியல்வாதிகளும்,கோடிகணக்கில் மக்களை சுரண்டும் தொழிலதிபர்களும் தான் இந்த சுதந்திரத்தின் பயனை நன்கு அனுபவிக்கிறார்கள்

இந்தியாவில் வறுமை நீங்கிவிட்டதா?

பெண்கள் மானத்துடன் வாழ முடிகிறதா?
நகையணிந்து திருடர்களின் பயமின்றி நடமாட முடிகிறதா?
அனைவருக்கும் கல்வி கிடைத்துவிட்டதா?
உழைக்கும் தகுதி படைத்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறதா?
நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளதா?
வேலை வாய்ப்பு அலுவலகத்தில பதிவு செய்த அனைவருக்கும் வேலை கிடைத்துவிட்டதா?
அணைத்து மக்களுக்கும் அரசியல் சட்டத்தில் உள்ள உரிமைகளும் கிடைத்துவிட்டனவா?
அனைத்து மக்களும் இருக்க இடம்,உடுக்க உடை, சமூக பாதுகாப்பு, வயிறார உண்ண உணவு கிடைத்துவிட்டதா?
தொழில் செய்து வாழ்வில் வளம் பெற கட்டமைப்பு வசதிகள்,தடையற்ற மின்சாரம் உள்ளதா?
அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளதா/?
அனைவருக்கும் நீதி உரிய காலத்தில் கிடைத்துவிட்டதா?
மக்களிடம் உள்ள பலவிதமான ஏற்றதாழ்வுகள் மறைந்துவிட்டதா/
லஞ்ச ,ஊழல் இல்லாத நேர்மையான நிர்வாகம் நடைபெறுகிறதா?
நாட்டில் அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டனவா?

எந்த கண்றாவியும் இல்லை

எல்லா இடத்திலும் ஊழல்,எல்லா கட்டத்திலும் ஊழல்,லஞ்சம்
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும் அரசுகள் மக்களை ஏமாற்றி
அரசியல்வாதிகள் பகல் கொள்ளையடித்து கொழுக்கவும்  மக்கள் எந்த முன்னேற்றமும்  இன்றி திண்டாடிகொண்டிருக்கிரார்கள்

நாளுக்கு நாள் வேலையில்லா திண்டாட்டம், அப்பாவி மக்கள் மீது அத்துமீறல்கள், சமூக விரோதிகள் பெருக்கம், வாழ வழியில்லாமல்
சாலை ஓரங்களில் வாழ்வை கழிக்கும் கோடிகணக்கான மக்கள்

கட்டுபடுத்த இயலாத அராஜகம்,விஷம்போல் ஏறி வரும் விலைவாசிகள்
கணக்கி லடங்கா வரிகள், என துன்புறும் மக்களின் வாழ்க்கையைத்தான் இந்த சுதந்திரம் தந்திருக்கிறது.
 .
எங்கு பார்த்தாலும் மக்களின் அதிருப்தி
அதை தங்களுக்கு சாதக பயன்படுதிகொள்ளும் தீவிரவாதிகள்
அவைகளை சரியாக அணுகாமல் சிக்கலாக்கும் அரசுகளின் அணுகுமுறை
இந்தியாவின் அண்டை நாட்டினர் யாருடனும் சுமுகமான உறவில்லை
நம் வெளிஉறவு கொள்கை திடமானதாக இல்லை

இந்த குளறுபடிகளை யார் சரி செய்ய போகிறார்கள். ?

No comments: