Wednesday, December 14, 2011

முல்லை பெரி யாரு? பொறுப்பு?

முல்லை பெரி யாரு? பொறுப்பு?

முல்லை பெரியார் பிரச்சினை பல ஆண்டுகளாக சரியாக
கையாளைபடாமல் இன்று பூதாகாரமாக வெடித்துள்ளது
அற்ப காரணங்களுக்காக இந்த பிரச்சினையை கேரளா அரசு
தன குறுக்கு புத்தியை பயன்படுத்தி சிக்கலாக்கி கொண்டிருக்கிறது
வழக்கம்போல் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் தனி ஆவர்தனம் வாசித்து
கொண்டிருக்கிறார்கள்
முல்லை பெரியார் பிரச்சினையை விட நம் அரசியல் கட்சி
தலைவர்கள் உருவாக்கும் பிரச்சினை கேலிக்குரியதாக இருக்கிறது

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்குள் கேரளா அரசு பலவிதமான
நாடகங்களை தினம் தினம் அரங்கேற்றிகொண்டிருக்கிறது

இந்த தாமதத்தினால் தமிழ்நாட்டு அப்பாவி பொது மக்கள்
உணர்ச்சி வசப்பட்டு கலவரங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்
இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலை தூக்க
ஆரம்பித்துவிட்டது. தூங்கிகொண்டிருந்த தமிழ் மக்களை எழுப்பி
கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க திட்டமிட்ட கேரளா அரசு நினைத்ததை
சாதித்துவிட்டது.இந்த சாக்கை வைத்து எதிர்கட்சிகளும் ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்பாகிவிட்டது.

இதற்கெல்லாம் காரணம் மக்களின் பொறுமையின்மையும்
பொறுப்பற்ற இரு மாநில அரசுகளும்,அற்ப காரணங்களுக்காக
வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஆளும் மத்திய அரசும்

இந்த பிரச்சினையை இரு அரசுகளும் நேரடியாக பேசி ஒரு சுமுக
முடிவை எட்டாமல் எதற்கெடுத்தாலும் நீதிமன்றங்களையும்,மத்திய அரசையும் நாடுவது மக்கள் நலனில் அக்கறையில்லாத மாநில அரசுகளின்
விவேகமற்ற செயல் என்றே கருதவேண்டும்

.

No comments: