Sunday, December 18, 2011

யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? யாருக்கு தேவை உங்கள் அறிவிப்பு ?

முல்லை பெரியார் அணையை உடைத்துவிட்டு
புதிய ஆணை கட்டினாலும் தமிழகத்திற்கு உரிய  தண்ணீர் தர
சட்டம் இயற்றுவோம்-
உம்மான் சாண்டி- பெங்களூருவில் அறிவிப்பு

யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு?
யாருக்கு தேவை உங்கள் அறிவிப்பு ?

வருண பகவான் நினைத்தால்
எங்கள் வயிறு தானாகவே நிரம்பிவிடும்
அதை நிரப்ப இங்கிருக்கும் அரசுகள்
முயற்சி செய்தால் 

அரசியலமைப்பு  சட்டத்தின் கீழ் அமைக்க்கபட்ட உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்பையே துச்சமென தூக்கி எறிந்த கேரளா அரசின் இந்த பேச்சை யார் நம்புவது?


உங்கள் நோக்கம் என்னவென்று
அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது

தமிழ்நாடு முழுவதும் தங்க நகைகள் மீது கடன் தர
கேரளா நிதி நிறுவனங்கள் புற்றீசல்கள் போல் ஒரு பக்கம்

மறு பக்கம் அந்த நகைகளை ஏலத்தில் எடுத்து அதை அதிக விலையில் தமிழக மக்களுக்கே விற்கும் கேரளா தங்க நகை கடைகள் ஒருபக்கம்

இதற்க்கு விளம்பரம் செய்ய தமிழ் நாட்டு நடிகர்களை பயன்படுத்தும்
உங்கள் யுக்தி

உங்கள் குறுக்கு புத்தி தமிழனுக்கு சுட்டு போட்டாலும்  வராது


என்ன செய்வது?

இப்போதாவது உங்களை புரிந்துகொண்டார்களா தமிழர்கள்
என்றால் அதுதான் இல்லை
.
ஆனால் தற்போது மட்டும்
இனிமேல் நீங்கள் என்ன சொன்னாலும் செய்தாலும்
அது எடுபடாது




No comments: