Thursday, December 29, 2011

விவசாயிகளின் நிலைமை ஏன் பரிதாபகரமாக உள்ளது?

விவசாயிகளின் நிலைமை ஏன் பரிதாபகரமாக உள்ளது?

முன்பு விவசாயிகள் இயற்கை முறையில் யாரையும் சாராது விவசாயம் செய்து வந்தனர்

இலவசமாக கிடைத்த இயற்க்கை உரங்களை பயன்படுத்தி சத்தான
உணவு பொருட்களை பயிரிட்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்

இந்திய சுதந்திரம் அடைந்தவுடன் அதிக உணவு உற்பத்தி பெருக்க ரசாயன உரங்களையும் பூசிகளை கொள்ள பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தி
பயிர் செய்ய அவர்களை மூளை சலவை செய்து அவர்களை உர வியாபாரிகளையும் அரசுகளையும் நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்
.
கிராமங்களில் உள்ள நீர் நிலைகள் ,ஆறுகள் அனைத்தும் பராமரிப்பின்றி
நீர் வரண்டுபோனதால் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்
அதுவும் வரண்டுபோய் ஆழ்குழாய் மூலம் நீரை இறைத்து விவசாயம் செய்யும் நிலை வந்தபிறகு மின்மொடோரை இயக்க மின்சாரம் பயன்படுத்த நேரிட்டது.
 இப்படியாக இலவசமாக தன உழைப்பை மட்டுமே நம்பி இயற்க்கை விவ சாயம் செய்துவந்த விவசாயிகள் எப்பொழுது பிறரை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளபட்டனரோ அன்றே அவர்களின் வீழ்ச்சி தொடங்கியது
.உற்பத்தி செலவுகள் பன்மடங்கு பெருகியது.
பயிருக்காக வாங்கிய கடன், வட்டி என சுமை ஏறியது.

ஆனால் துரதிஷ்டவசமாக உணவு பொருட்கள் விலை
செய்யப்பட்ட செலவை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படவில்லை.

 தரகர்கர்கள் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அதிக விலைக்கு வியாபாரிகளிடம் விற்று கொழுத்தனர்
பயிர் செய்த விவசாயிக்கு அடக்க விலையும் கிடைக்கவில்லை,லாபமும் இல்லை இந்நிலை தொடர்ந்துகொண்டே வருகிறது
.
அரசுகள் விவசாயிகளை கண்டுகொள்வதேயில்லை அவ்வபோது சில சலுகைகளை அறிவித்தாலும் அதிலும் இடைத்தரகர்கள் புகுந்து அதையும் கொள்ளையடித்து. வருகின்றனர்.

விவசாயிகள் தங்கள் பயிரிடும் பொருளுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை பெறும் வரை இந்த அவல நிலை நீடிக்கும்.

விவசாயத்திற்கு தொடர்பில்லாத நபர்களை வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலிருந்து நீக்குவதும், இடைத்தரகர்கள் ஒழிப்பதும்,உணவு சேமிப்பு கிடங்குகளை அமைப்பதும், விற்று தீரும் வரை பொருட்கள் கெடாமல் இருக்க உணவு பாதுகாப்பு நிலையங்களை அமைத்தலும் விவசாயிகள் பிரச்சினைகள் தீர மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகளாகும்
.
முன்கூட்டிய திட்டமிடுதலும் தேவையான   உரம் விதை போன்றவற்றை சேமித்து  தயாராக வைத்தலும் இயற்க்கை விவசாயத்திற்கு  மீண்டும் மாறுதலும் ,நீர்நிலைகளை கொள்ளையடிக்கும் ஒப்பந்தகாரகளிடம் பராமரிப்பு செய்ய விடாது அவர்கள் மேற்பார்வையில் பராமரித்து கொள்வது நல்ல பயனை தரும் 

No comments: