Tuesday, January 24, 2012

லொள்ளு தாங்கமுடியவில்லை

இனியும் தாங்காது 
இந்த கண்ணா மூச்சி ஆட்டம் 

லொள்ளு தாங்கமுடியவில்லை

கூடங்குளம் அணுமின்நிலையம் 
அமைக்க செலவு 14ஆயிரம் கோடிக்கு மேல்
ஒரு தனி மனிதன் ஒரு சிறு கூட்டத்தை 
வைத்துகொண்டு அதை 
திறக்க விடாமல் செய்கிறார்

பல கோடி மக்கள் பயன் பெறும் திட்டத்தை 
செயல்படாமல் தடுக்க அவர் மாநில, மத்திய
அரசுகளையே மிரட்டுகிறார் 

அணுமின்நிலையம் திறக்க ஆதரவு 
எத்தனையோ போராட்டங்கள் 
தமிழ்நாடு முழுவதும் 
நடந்து ஓய்ந்து விட்டன
ஒன்றும் பயன்படவில்லை/
எடுபடவில்லை 

நம் நாட்டில் மக்களுக்காக  
மக்களின் நன்மைக்காக ஆளுகின்ற அரசு என்று 
ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை 

சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள்,
 மாநிலங்களவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், 
முதலமைச்சர், பிரதம மந்திரி, ஜனாதிபதி 
என்று ஏராளமான கூட்டம் இருந்தும் 
ஒரு தனி மனிதனை கண்டு பயந்து 
மக்களுக்கு பயன் படும் திட்டத்தை 
கிடப்பில் போட்டு வைத்திருப்பதின்  மர்மம் என்ன 
என்று யாருக்கும் புரியவில்லை

தினந்தோறும் வாய்சொல் வீரர்களின் 
வெத்து வேட்டு அறிக்கைகள்
நாளிதழில், தொலைகாட்சியில் பெயர் வந்ததும் 
அடுத்த அறிக்கை விட தயாராகிவிடும் அரசியல்வாதிகள்

தமிழ்நாட்டு மக்களே.இந்திய மக்களே 
உங்களுக்கு விடிவுகாலமே கிடையாதா?

நீங்கள் என்றுதான் செயல்படவைக்கும் 
தலைமையை தேர்ந்தெடுக்க 
துணிவீர்கள்?

எரிகின்ற கொள்ளியில் எந்த கொள்ளி சுமார் 
என்றுதான் ஒவ்வொரு தேர்தலிலும் 
ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டிய 
கட்டாய சூழ்நிலையை உருவாக்கியது யார்?

சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது 


இலவசங்களை பெற்றுக்கொண்டு 
ஐந்து ஆண்டுக்கொருமுறை அடிமைசாசனம் 
எழுதி கொடுப்பதற்குத்தான் நீங்கள் பிறந்திருகிறீர்களோ ?

அப்படியானால் நீங்கள் இருந்தும் ஒன்றுதான்
இல்லாததும் ஒன்றுதான் 


Tuesday, January 10, 2012

தமிழ்நாட்டை இரண்டு பேய்கள் பிடித்து ஆட்டுகின்றன

பேய்களை யார் ஒட்டுவார்கள் ?

தமிழ்நாட்டை இரண்டு பேய்கள் பிடித்து ஆட்டுகின்றன

ஒன்று கூடங்குளம் பேய்
மற்றொன்று முல்லை பெரியார் பேய் 

கூடங்குளம் பேயை தமிழ்நாட்டின் மீது ஏவியிருப்பவர்
உதயகுமார் என்னும் மந்திரவாதி

அவர் மகுடிக்கு கட்டுப்பட்டு அவருடன் 
சேர்ந்துகொண்டு சில மாதங்களாக 
பலநூறு பேய்கள் ஆடிக்கொண்டு இருக்கிறன 
திரும்ப திரும்ப அந்த பேய் அணு உலை ஆபத்தானது 
அதனால் மக்கள் மடிந்துவிடுவார்கள்,
எல்லாம் அழிந்துவிடும் என்று 
அந்த பேய் திரும்ப திரும்ப் 
சொல்லிகொண்டிருக்கிறது 

அந்த பேயை ஓட்ட மத்திய அமைச்சர் நாராயணசாமி,
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போன்றவர்கள்
முயற்சி செய்து தோற்று போய் 
அவர்கள் வேலையை 
பார்க்க போய்விட்டனர் 

அணுஉலை பேய் இன்னும்
பயங்கரமாக உறுமி கொண்டிருக்கிறது

பேயை விரட்ட தலைமை பூசாரியான தமிழக முதல்வர் 
அவர் கோரிக்கைகளுக்கு பிரதம  மந்திரி செவி சாய்க்காததால்
இந்த பேயை அதன் போக்கில் ஆட விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறார் 


மற்றொரு பேய் முல்லை பெரியார் அணை பேய்


அதை தமிழ்  நாட்டின் மீது ஏவி விட்டிருப்பவர் 
மலையாளா மாந்த்ரீக மந்திரவாதி உம்மன் சாண்டி

அணை உடைந்து விடும் அதனால் லட்ச கணக்கில் மக்கள் செத்துவிடுவார்கள் என்று கோயபெல்ல்ஸ் புளுகு மூட்டையை அவிழ்துவிட்டுகொண்டு ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறார்

அந்த பேயை ஓட்ட தமிழக முதல்வர்,
 முன்னாள் முதல்வர், 
எதிர் கட்சி தலைவர்கள், 
பொது மக்கள் என பலர் முயற்சி செய்தும்
 ஒன்றும் நடக்கவில்லை
சாண்டி பேய் நாளுக்கு நாள் சண்டித்தனம் 
செய்துகொண்டு நிலைமையை 
சிக்கலாக்கிகொண்டிருக்கிறது

அந்த பேயை அடக்கவேண்டிய 
பிரதம மந்திரி பேயுடன் கூட்டு சேர்ந்துகொண்டு 
களி சாப்பிட்டுகொண்டு கதகளியை ரசித்துகொண்டிருக்கிறார் 

பாவம் தமிழ்நாட்டு மக்கள் 
அவர்கள் என்ன செய்வார்கள் 
புலம்புவதை தவிர வேறு வழி இல்லை 

   
பாரதி அன்று: எங்கெங்கும் காணினும் சக்தியடா 

இன்று: எங்கெங்கும் காணினும் குப்பையடா


இன்று தமிழ்நாட்டில் குப்பைகள் இல்லாத இடமேயில்லை 
மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தனி தனியே பிரித்து போட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டும் அதை காற்றில் பறக்கவிட்டு விட்டு கண்ட இடங்களில் குப்பைகளை வீசி எறிவதில் நம் நாட்டு மக்களுக்கு இருக்கும் ஆனந்தம் வேறு எதுவும் இல்லை 


மக்கும் குப்பை எது மக்காத குப்பை எது என்று தமிழ் நாட்டு மக்குகளுக்கு (மக்களுக்கு) என்று புரியபோகிறதோ தெரியவில்லை 


முக்கியமாக அவர்கள் குப்பைகளை போட தேர்ந்தெடுக்கும் இடம் கழிவுநீர் கால்வாய்கள், குப்பை தொட்டிகளின் வெளிப்புறத்தில், பேருந்து மற்றும், ரயில் வண்டி பாதைகள், நிலையங்கள், ,என எல்லா இடங்களிலும் குப்பைகளை போடுவது அவர்கள் இயல்பு. 
படித்தவன், பாமரன் என அனைவரும் இந்த விஷயத்தில் ஒன்றாக செயல்படுவது பாராட்டத்தக்கது


இதனால் எல்லாஇடங்களிலும் கழிவு நீர்தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை எல்லா நேரங்களிலும் பதம் பார்க்கின்றன

மக்களை வீடுகளிலேயே முடக்கி வைக்கின்றன
ஜன்னல் கதவுகளை திறந்து இயற்க்கை காற்றை 
சுவாசிக்க வழியில்லை
கதவை திறந்தால் துர்நாற்றமதான் வீசுகிறது


கொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசு விரட்டிகளுக்காக
பல நூறு ரூபாய்களை மாதம்தோறும் அழவேண்டி உள்ளது


அதை தவிர நோய்களில் மாட்டிகொண்டு மருத்துவ செலவு 
பல ஆயிரங்கள் அழுதும் இந்த மனித ஜன்மங்கள் 
கொஞ்சம் கூட பாடம் கற்றுகொள்வதாக தெரியவில்லை

ஆனால் என்ன துன்பபட்டாலும் 
குப்பைகளை கண்ட இடங்களில் வீசி எறிந்து 
மகிழும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை
என்பது தமிழ் நாட்டு மக்களின் ஏகோபித்த  கருத்து 

Monday, January 9, 2012

மருத்துவர்களின் இந்த போராட்டம் எந்தவிதத்தில் நியாயம்-சிந்திப்பீர்

மருத்துவர்களின் இந்த போராட்டம் 
எந்தவிதத்தில் நியாயம்-சிந்திப்பீர் 


தூத்துக்குடியில் மருத்துவர் கொலை :

காரணம்: சிகிச்சைக்காக அதிக பணம் செலவழித்தும் 
தன மனைவி ,குழந்தையை காப்பாற்றாமல் அறுவை சிகிச்சை செய்யும்போது பிரச்சினை ஏற்பட்டு வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கையில் மரணம் .அந்த சோகமும், வேதனையும் கொலையில் முடிந்திருக்கிறது .இது ஒரு தனிபட்ட நிகழ்வு.

இதுபோன்ற நிகழ்வுகள் நம் நாட்டில் ஏராளமாக நடக்கின்றன. ஆனால் கொலை செய்யும் அளவிற்கு யாரும் செல்வதில்லை. மறியல்,வழக்கு என்று செல்வதை தவிர.

இந்த நிகழ்வில் சம்பத்தப்பட்ட மருத்துவர் இந்த குறிப்பிட்ட 
அறுவை சிகிச்சையை செய்ய தகுதி பெற்றவர் அல்ல 
என்பது தற்போது வெளியாகி இருக்கும் செய்தி. இவர் போன்றவர்கள் பணம் சம்பாதிப்பதர்க்காக செய்த முறையற்ற செயல் 
அவர் உயிரை பலி வாங்கி விட்டது

இதுபோல்தான் தமிழ் நாட்டில் ஒரு மருத்துவர் தகுதி பெறாத தன மகனை அறுவை சிகிச்சை செய்ய வைத்து விளம்பரம் பெற நினைத்து  வம்பில் மாட்டிகொண்டார்

இன்று அனைத்து மருத்துவர்களும் வீதியில் 
இறங்கி போராடுகிறார்கள் 
தங்களுக்கு பாதுகாப்பு கோரி


யார் யாருக்கு பாதுகாப்பு தருவது? 
ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அளித்தாலும் 
வரும் மரணத்தை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது
அவரவர் நேர்மையும்,நன்னடத்தையும் பிற உயிர்களிடம் அவர்கள் காட்டும் அன்பும் பரிவும்தான்  அவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து 
பாதுகாப்பு பெற்று கொடுக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் 



அது சரி  இவர்களிடமிருந்து அப்பாவி நோயாளிகளுக்கு
 யார் பாதுகாப்பு அளிப்பது?


நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?
உங்கள் மனசாட்சியை கேளுங்கள் பதில் கிடைக்கும் 

மருத்துவமனைகளில் நடக்கும் ஊழல்கள், அத்துமீறல்கள், பகல் கொள்ளைகளை நாடே அறியும்,
மருந்து தயாரிக்கும்நிறுவனங்கள் பரிசோதிக்கும் கருவிகள் ,ரத்தம் மலம் மற்றும் பலவிதமானஆய்வு கூட உரிமையாளர்கள், மருந்தகங்கள் ஆகியவர்களோடு மருத்துவர்கள்  சேர்ந்துகொண்டு கமிஷன் அடித்து அந்த தொகையை நோயாளிகளின் தலையில் கட்டுவதையும் மக்களும்  அறிவர், ஏன் அவர்களும் அறிவர்ர்கள்

தேவையில்லாமல்,பரிசோதனைகள் செய்ய வைத்து பல ஆயிரம் முதல் லட்சம் வரை மக்களின் இயலாமையை பயன்படுத்தி காசு பறிக்கும் பகல் கொள்ளையர்களின் மீது உள்ள ஒட்டுமொத்தமான ஆத்திரம்தான் தூத்துக்குடி கொலை 

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறியாதீர்கள் மருத்துவர்களே 
மக்கள்கோபம் உங்கள்மீது திரும்பினால்  நீங்கள் இருக்கும் இடத்தில கட்டிடம் இருக்காது, நீங்களும் இருக்கமாட்டீர்கள். வெறும் கற்கள்தான் இருக்கும்.

நேர்மையாக வாழுங்கள் உங்கள் சேவையால் மக்கள் நெஞ்சங்களில் வாழ முயற்சி செய்யுங்கள். ஆடம்பரமாகமருத்துவமனைகளை கட்டி கொள்ளையடிப்பதைவிட்டு.விட்டு   

Sunday, January 8, 2012

நாட்டு மக்களின் நலனில்; அக்கறையில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

நாட்டு மக்களின் நலனில்; அக்கறையில்லாத 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

120கோடி மக்களின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வழிவகைகளை ஏற்படுத்தி தர அனுப்பிவைக்கப்பட்ட நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் ஒவ்வொரு கூட்ட தொடரிலும் நடந்துகொள்கின்ற விதம் அறுவருக்கதக்கும் படியாகவும் முகம் சுளிக்க கூடியதாகவும் இருக்கிறது

இந்நிலை தொடர்ந்து சில ஆண்டுகளாக நீடித்து வருவது கவலைக்குரியதாகவும் ஜனநாயகத்தை கேள்விக்குரியதாகவும் ஆக்கிகொண்டிருக்கிறது

இதில்  ஆளும் கட்சியும் எதிர் கட்சிகளும் சூதாட்டம் நடத்திக்கொண்டு மக்களின் வரிப்பணம் கோடிகணக்கான ரூபாய்களை வீணடித்துகொண்டு வருகின்றன 

இதை தவிர பல லட்சம் கோடிகணக்கான ரூபாய்களை ஊழல் செய்து ஆளும்  கட்சி அமைச்சர்களும், துறை அதிகாரிகளும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பகல் கொள்ளைஅடிக்கும் வர்த்தக நிறுவனங்களும் மக்களை மோசடி செய்து மகிழ்ச்சியாக உலா வருகின்றனர்.

மக்களோ நாளுக்கு நாள் ஏமாற்றப்பட்டு,தினம் தினம் துன்பங்களை அனுபவித்து கொண்டு ஏதும் செய்வதறியாது அல்லல் பட்டுகொண்டு வருகின்றனர்

இந்த அழகில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏராளமான சலுகைகள்.இலவசங்கள் தொகுதி நிதியில் கமிஷன் என ஏராளமான வருமானங்கள் இவ்வளவையும் பெற்றுக்கொண்டு தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களின் முன்னேற்றதிர்ற்கு எதுவும் செய்யாமல் ராஜ போக வாழ்க்கை வாழுவது மக்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும்


தங்கள் தொகுதியில் மாநில அரசுகளால் நிறைவேற்றமுடியாத அதிக நிதி தேவைப்படும் திட்டங்களை நிறைவேற்ற எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுப்பதில்லை. தங்கள் தொகுதி நிதியில்  ஒரு சில கட்டிடங்களையோ  அல்லது ஒரு சில சாலை பணிகளையோ நிறைவேற்றுவதோடு ஒதுங்கிகொள்கின்றனர். 


தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றதிற்கு சென்ற பிறகு எந்த உறுப்பினரும் மக்களை சந்திப்பதே கிடையாது.அப்படி சந்தித்தால் அது இரவு நேர கட்சி கூட்டமாகத்தான் இருக்கும் 
 . 
அவர்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி மக்கள் குறைகளை கேட்பதும் கிடையாது

அப்படி பெற்றுகொண்டாலும் அவைகள் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கபடுவதோடு . அவைகள் மீது முறையான தீர்வு கிடையாது.


 மக்கள் அவர்களை சந்திக்க நகரத்திற்கு வந்து காத்து கிடக்க வேண்டும் அவர்களின் ஆதரவாளர்களை மீறி யாரும் அந்த குறுநில மன்னரை  சந்திக்க முடியாது. இந்நிலை என்று மாறுமோ தெரியவில்லை?.


மன்னராட்சி ஒழிந்தது. ஆனால் இன்று  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமான மன்னர்கள் மக்களிடையே தன் சகாக்களுடன் ஆடம்பரமாக  வலம் வந்துகொண்டு இருக்கின்றனர்

அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஐந்தாண்டுக்கொருமுறை தன் அறியாமையாலும், வறுமையினாலும் சில இலவசங்களை அவர்களிடம் பெற்றுக்கொண்டு தங்கள் வாக்கை அவர்களுக்கு கொடுத்துவிட்டு வழக்கம்போல் மக்கள் முட்டாள்களாகி தன் தலைவிதியை நொந்துகொண்டு நடைபிணம்போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் 




இனிமேலாவது மக்களவையிலோ ,மேலவையிலோ மக்களுக்கு பயன்படும் படியான நடவடிக்கைள் ஏதும் மேற்கொள்ளாமல் கூச்சலும் குழப்பமும் விளைவித்தால் அன்றைய தினத்திற்கான செலவுகள்,படிகள் ஆகியவற்றை கணக்கிட்டு உறுப்பினர்களின் படியிலிருந்து அன்றே வசூல் செய்து அரசு கணக்கில் சேர்க்கவேண்டும்

கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு தண்டனையும் விளையாட்டுகளில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரர்களுக்கு அபராத தொகை  விதிப்பது போல்,  அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றவேண்டும்

அப்படி செய்தால் நாடு உருப்படும். நாட்டு மக்களுக்கும் நன்மை ஏற்படும்  

உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது. மக்களின் ஆதங்கத்தை
வெளிபடுத்தாமல் இருக்கவும் முடியாது.ஆனால் உண்மை இதுதான்  

Saturday, January 7, 2012

தொடர்ந்து மக்களை ஏமாற்றி மக்களை சுரண்டி வாழும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தால்தான் இந்தியா உருப்படும்

காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் அறிக்கை
 :
ஊழல் குற்றச்சாட்டால் மாயாவதி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பாபுசிங்  குஷ்வாகா காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்தார் ஆனால் ஊழல் கறை படிந்த எந்த ஒரு நபரையும் சேர்த்துக்கொள்ள  மாட்டோம் என்பதை அவரிடம் தெளிவாக தெரிவித்துவிட்டோம் அவர் சிறைக்கு செல்ல வேண்டியவர் இப்படிப்பட்ட நபரைத்தான் பா ஜ தலைவர்கள் .தங்களுடம் சேர்த்துக் கொண்டுள்ளனர்

போபோர்ஸ் பீரங்கி  ஊழலின் வாரிசுக்கு பிறந்தது
ஊழலை பற்றி  பேசுவது வேடிக்கையாக உள்ளது
ஒருவேளை எங்களிடமே ஏராளமான ஊழல் பேர்வழிகள் இருக்கிறார்கள் நீங்கள் வேறு எதற்கு என்று என்ற எண்ணத்தில் அப்படி சொல்லியிருக்கலாம்  

அலைகற்றை ஒதுக்கீட்டில் பல லட்சம் கோடி ருபாய் ஊழல் செய்து மாட்டிகொண்டு சில அமைச்சர்கள் கம்பி எண்ணி கொண்டிருக்கிரார்கள்
இன்னும் சிலர் உள்ளே போக போகிறார்கள்

பங்கு சந்தை ஊழல்,காமன்வெல்த் விளையாட்டு ஊழல்என்று ஏராளமான ஊழல்களின் ஊற்றுகண்ணான காங்கிரஸ் கட்சி ஆட்சியின் லட்சணம் உலகம் முழுவதும் சந்தி சிரித்து கொண்டிருக்கிறது

ஆண்ட அறுபது ஆண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றிய ஊழல்களின் மதிப்பு கணக்கிலடங்காதவை 

கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைத்துள்ள பணமும் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது

சில பேர் மாட்டிகொள்ளாமல் மேல்லோகம் போய்விட்டார்கள்

9ஆண்டுகளுக்கு முன் ஊழல் செய்து மாட்டிகொண்ட சுக்ராம் தற்போதுதான் சுகமாக கம்பி எண்ண போயிருக்கிறார்

தொடர்ந்து மக்களை ஏமாற்றி மக்களை சுரண்டி வாழும் காங்கிரஸ் கட்சி
ஒழிந்தால்தான் இந்தியா உருப்படும்




Friday, January 6, 2012

தானே புயலுக்கு பின்னே?

தானே புயலுக்கு பின்னே?

புயல் அடித்து சென்று விட்டது
வாழ்வாதாரங்களை முழுவதுமாக சுவடு தெரியாமல் அழித்துவிட்டது

இன்னும் அதை நினைத்து புலம்புவதை மக்களும் நிறுத்தவேண்டும்
எதிர் கட்சிகளும்,ஊடகங்களும் நிறுத்தவேண்டும்

அரசை குறை கூறுவதை விட்டுவிட்டு எதிர்கட்சிகளும் ,ஊடகங்களும் அரசுடன் சேர்ந்து மக்களுக்கு உதவி செய்வதுதான் தற்போதைய 
கடமை. மற்ற அரிப்புகளை  தேர்தலின்போது வைத்துகொள்ளலாம் 


உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து மக்களின்
வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த குறுகிய மற்றும் நீண்ட கால
மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு துரிதப்படுத்த வேண்டும்

வெறும் நிதி மட்டும் வழங்கினால் அதில் பாதி லஞ்ச பேர்வழிகளுக்கும் மீதி டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கும், சாராய வியாபாரிகளுக்கும் போய்விடும் மீதி தொகையை மக்கள் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடுவார்கள். 

பயிர் வேலைகளை தொடங்க நிலம் மேம்பாடு,செய்ய,இடுபொருட்கள் வழங்க, மின் சக்தி வழங்க உடன் ஏறபாடு செய்ய வேண்டும் 


புயலால் விழுந்து போன ஆயிரகணக்கான மரங்களை அப்புறபடுத்த, வனத்துறையினரின் யானைகளையும் போகலைன்   இயந்திரங்களையும் பயன்படுத்தினால் விரைவில் இந்த பணியை முடிக்கலாம்



பார பட்சம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் தங்கள் இழந்த தொழிலை தொடங்க தேவையான உதவிகளை செய்ய வேண்டும்



Thursday, January 5, 2012

பாரதி அன்றும் இன்றும்

 பாரதி அன்றும் இன்றும் 


அன்று:  கல்வியில் சிறந்த தமிழ்நாடு 


இன்று : கலவியில் சிறந்த தமிழ்நாடு 


                  செய்தி: பள்ளி ஆசிரியர் மாணவியிடம் பாலியியல் துன்புறுத்தல்
                                    எல்.கே ஜி மாணவியிடம் தலைமை ஆசிரியை மற்றும்     
                                   ஆசிரியை பாலியல் துன்புறுத்தல் -குற்றத்தை மறைக்க  
                                    மருத்துவர் உடந்தை-புகார்

இதுபோன்ற பாலியல் கொடுமைகள்  வீட்டிலும் வெளியும் தினம் நடந்து கொண்டிருக்கின்றன .மருத்துவ மனைகள், அலுவலகங்கள்,மாணவர் விடுதிகள்,ஓடும் ரயிலில் ,காவல் துறை என தினமும் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. 


சமூக அவமானம் கருதி அனேக பெண்கள் இதை வெளியில் சொல்லுவதுமில்லை குற்றவாளிகளை காட்டி கொடுப்பதுமில்லை ஏனெனில்புகார் அளித்தால்  குற்றவாளிகளை விட பாதிக்கபட்டவர்கள்தான் அதிக துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கபடுகின்றனர் .


உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி கடுமையான சட்டங்கள் நிறைவேற்றியும் அவைகளை நிறைவேற்ற எந்த அரசுகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. பொதுமக்களும் அக்கறை காட்டுவதில்லை. 


பத்திரிகை துறையும், திரைப்பட துறையினரும் ,தொலைகாட்சி ஊடகங்களும் இந்த விஷயத்தை தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுதிகொள்வதில் காட்டும் அக்கறை பாதிக்கப்பட்டவர்களில் மறுவாழ்வுக்கோ அல்லது குற்றவாளிகள் உரிய தண்டனை பெறுவதற்கோ அக்கறை காட்டுவதில்லை 


திரைபடங்களில் பெண்களின் உடலழகை மிகைபடுத்தி ஆபாசமாக சித்தரிப்பதில் அனைத்து தயாரிப்பாளர்களும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர். பாடலாசிரியர்களும் அவர்கள் பங்குக்கு ஆபாச பாடல்களை எழுதி காசு பார்க்கின்றனர். 


சின்ன திரையும் அவர்களைவிட பல மடங்கு பெண்களை இழிவு செய்யும் காட்சிகள் ஒவ்வொரு தொடரிலும் இணைத்து மக்களின் ரசனையை கெடுத்து அவர்கள் மனதில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் செய்துவிட்டனர். 


இதை எந்த மாதர் அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை 


பெண்களை இழிவுபடுத்துவதில் ஆண்களை விட பெண்களின் பங்கே 
அதிக அளவு இருப்பதால் இந்த பிரச்சினையில் அவர்கள்தான் 
முதலில் திருந்த வேண்டும் 







Wednesday, January 4, 2012

மக்களின் துன்பங்களுக்கு யார் காரணம்?

மக்களின் துன்பங்களுக்கு யார் காரணம்?

மக்களா அல்லது 
மக்களை குழப்பும் அரசியல்வாதிகளா அல்லது
மக்களை ஆளும் அரசுகளா?

உண்மையில் மக்களின் துன்பங்களுக்கு காரணம் மக்களே

நம் நாடு சுதந்திரம் அடைந்த பின் 
எல்லாவற்றிற்கும் ஆளும் அரசுகளையும் அரசு இயந்திரங்களையும் 
குறை சொல்லுவதே இயல்பாகி போய்விட்டது

எதற்கெடுத்தாலும் அரசு இயந்திரத்தை எதிர்பார்ப்பதே 
தீராத வியாதிஆகிவிட்டது 

எந்த பிரச்சினைகளிலும் ஒருவொருக்கொருவர்
உதவி செய்து கொள்ளும் மனப்பான்மை செத்துவிட்டது

வெளியிலிருந்து உதவி கிடைக்கின்றவரை 
தங்களிடம் இருக்கின்றவற்றை 
இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் தூய 
மனப்பான்மை அடியோடு அற்று போய்விட்டது 

தங்களுக்கு தேவையானதை மட்டும்
வைத்துகொண்டு 
இல்லாதவர்க்கு வழங்குவதும் 
இருப்பதை அனைவரும் பகிர்ந்து கொண்டு 
வாழும் உத்தம குணம் இன்று யாரிடமும் இல்லை
  
சுயநலம் காரணமாக அரச வழங்கும் உதவிகளை 
அனைவருக்கும் பகிர்ந்து அளிக்காமல் 
ஒரு சிலரே அனுபவிப்பதால் 
பெரும்பாலான மக்கள் துன்பத்தில்
 சிக்கி தவிக்கிறார்கள்

பொதுமக்களிடம் பொறுமை இல்லை,
சகிப்புத்தன்மை இல்லை, 
நேர்மை இல்லை, ஒழுக்கம் இல்லை .
அதனால்தாம் மக்கள் தொடர்ந்து 
துன்பங்களை அனுபவிக்கிறார்கள் 

மக்களின் இந்த மனோபாவம் மாறவேண்டும்.
மாறினால்தான் அனைவருக்கும் நல்லது
இல்லையேல் அவர்களும் நிம்மதியாக வாழமுடியாது
அவர்களை ஆளும் அரசுகளும் நல்ல அரசாட்சியை வழங்க முடியாது.

தேவையா இந்த போலி சுதந்திரம்

தேவையா இந்த போலி சுதந்திரம்?

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொன்னார்கள்

எல்லோரும் சரிசமம் என்று சொன்னார்கள்

எல்லா உரிமைகளும் கிடைக்கும் என்று சொன்னார்கள்

வறுமை நீங்கி வாழ்வு வளம் பெரும் என்று சொன்னார்கள்

எல்லோரும் கல்வியறிவு பெறலாம் என்று சொன்னார்கள்

எல்லோருக்கும் சட்ட பாதுகாப்பு கிடைக்கும் என்று சொன்னார்கள்

ஆனால் என்ன நடக்கிறது?

நாடு முன்னேறியுள்ளது


ஆனால் நாட்டு மக்கள் முன்னேறினார்களா  என்பதுதான் கேள்வி?


பல கோடி மக்கள் அடிப்படை தேவைகளை கூட
பெற இயலாது தவிக்கின்றனர் 
என்பதை யாரும் மறுக்கவோ 
மறைக்கவோ முடியாது 


சாராயமும், மதுவும் நாட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது

பணக்காரன் வெளிநாட்டு சரக்கு குடிக்கிறான்

ஏழை குடலை அழிக்கும் சாராயத்தையும்,
விஷ சாராயத்தையும் குடித்து
தானும் அழிந்து தன குடும்பத்தையும்
நிர்க்கதி ஆக்குகிறான்

கல்வி பணக்காரர்களுக்கே கிடைக்கிறது
ஏழை குழந்தைகள் கல்வியறிவு
பெறமுடியாமல் தத்தளிக்கின்றனர்

பலகோடி பேர் வேலை வாய்ப்பு  அலுவலகத்தில்
பல ஆண்டுகள் பதிவு செய்தும்
வேலை கிடைக்கவில்லை

மேற்கத்திய கல்வி முறையால் மாணவர்களிடம்
மன அழுத்தம்தாம் அதிகமாகியுள்ளது 
ஒரு சின்ன பிரச்சினையை கூட எதிர்கொள்ளும் 
மன உறுதி அவர்களுக்கு இல்லை
.
குடிக்கிறார்கள், புகையிலை போதைக்கு
அடிமையாகி தங்களை வாழ்வை
 நாசமாக்கிகொள்ளுகிரார்கள் அழிதுகொள்ளுகிரார்கள்.
சினிமா,மற்றும் அரசியல் பிசாசுகளிடம் சிக்கி
தங்கள் எதிகாலத்தை கேள்விகுறியாக்கி கொள்ளுகிறார்கள்

வீட்டிலும் பாதுகாப்பில்லை,
வெளியிலேயும்  பாதுகாப்பில்லை.
வீட்டை பூட்டிவிட்டு சென்றால் 
அன்றே கொள்ளை போகும் 
அனைத்து பொருட்களும்.
தடுத்தால் உயிர் போகும் 
அது இரவானாலும்,பகலானாலும் சரி
.
வெளியில் சென்றால் வழிப்பறி கொள்ளை

வயதான பெண்கள்,தனியே இருக்கும் பெண்கள்
எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம்,
கொலை செய்ய படலாம்
பாலியல் தொல்லைக்கு உட்படுத்தபடலாம்

பெண் குழந்தைகளுக்கு பள்ளியிலும் பாதுகாப்பில்லை.
ஆசிரியர்களே பாலியியல் தொல்லை தருகிறார்கள் 
கல்வி  கற்பிப்பதை விட்டு கலவியை பற்றி பேசுகிறார்கள்.

நிம்மதியாக தொழில் செய்ய
அரசும் விடுவதில்லை
சமூக விரோதிகளும் விடுவதில்லை.
தொழிலுக்கு தேவையான், மின்சாரம்,
கட்டமைப்பு வசதி ஒன்றும்
சரியாக கிடைப்பதில்லை

தினம் தினம் வரிகள் மக்களின் மீது திணிக்க படுகின்றன
மனிதன் பிறப்பிலிருந்து மண்ணிற்குள் போகும்வரை எல்லாவற்றிலும் வரி விதித்து மக்களை கொடுமைபடுத்தும் மாநில, மத்திய அரசுகள் 

விவசாயிகள் பாடு திண்டாட்டம். அவர்களை வாழ வைக்க எந்த அரசுகளும் முயற்சி எடுப்பதில்லை மாறாக அவர்களை தற்கொலைக்கு தூண்டி பல லட்சம் பேர் மாண்டுபோயிருக்கிரார்கள்

ஆனால் சமூக விரோதிகளும், லஞ்ச பேர்வழிகளும், கள்ள கடத்தல்காரர்களும், அரசியல்வாதிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் மக்களை சுரண்டி கொழுத்து கோடீஸ்வரர்களாகி உள்நாட்டில் பணத்தை பதுக்கியது போதாதென்று வெளிநாட்டு வங்கிகளிலும் பதுக்கி வைத்துள்ளார்கள் 

ஒன்று அல்லது   இரண்டு பேர் வாழும் பணக்காரர்களுக்கு பல பங்களாக்கள் பல கோடி ரூபாயில் 

உழைத்து ஓடாய் போகும் பல கோடி மக்களுக்கு இருப்பிடம்,நடைபாதையில்

உழைப்பவர்களுக்கு அனைத்தும் காசு கிடைத்தால் தான் கிடைக்கும்

ஆனால் இவர்களை ஆட்சிசெய்யும் அரசியல்வியாதிகளுக்கு அத்தனையும் இலவசம் 


இது போதாதென்று அவர்கள் ஊழல்  செய்து மக்களுக்கு துரோகம் செய்து மக்களை ஏமாற்றி பல தலைமுறைக்கு சுருட்டும் பணம் பல லட்சம் கோடி


நாட்டில் எங்கு பார்த்தாலும் மோசடிகள்,எதிலும் மோசடிகள்.மக்களை ஏமாற்றிபணம் பறிக்கும் கும்பல்ஸ் இல்லாத இடமே இல்லை


நீதித்துறை தூங்கி வழிகிறது
காலத்திற்கு ஒவ்வாத சட்ட பிரிவுகள்
நிரபராதிகளை விட குற்றவாளிகளுக்குதான் 
சாதகமான சட்ட பிரிவுகள் லட்சகணக்கான வழக்குகள் 
பல்லாண்டுகளாக தேக்கம்


கொடுமையான குற்றவாளிகளுக்கும் 
தண்டனை நிறைவேற்ற முடியாத அளவில் 
தவறான போராட்டங்கள்  

தினம் தினம் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள்  சாலை மறியல், வன்முறை பொது சொத்துக்களை சூறையாடுதல் காவல்துறை அடக்குமுறைகள்,துப்பாக்கி சூடுகள், உயிரிழப்புகள் இல்லாது ஒரு நாளும் விடியாது.மக்களின் அல்லல்களுக்கு அளவே இல்லை

மக்களை குழப்பும் பல நூறு அரசியல் கட்சிகள், மத வெறியர்கள்

மக்களின் எந்த பிரச்சினையும் தீர்க்காத கையாலாகாத மாநில,மத்திய அரசுகள்

எவ்வளவு காலம்தான் இந்நிலை நீடிக்கும்? 
என்று நம் நாட்டு மக்கள் நலமாக வாழ போகிறார்கள்? 
என்று சுயநல அரசியல்வாதிகள் ஒழிந்து
நம் நாட்டு மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்






Tuesday, January 3, 2012

தானே வந்து தமிழகத்தை பதம் பார்த்த தானே புயலின் கோர தாண்டவம் முடிந்து விட்டது





தானே வந்து தமிழகத்தை பதம் பார்த்த தானே புயலின் கோர தாண்டவம் முடிந்து விட்டது 

அது விட்டு சென்றது பேரழிவு

எடுத்துசென்றது பல உயிர்களை

வாழ்வதற்கே வழியில்லாது அனைத்து 
ஆதாரங்களையும் அழித்து விட்டது
கோர புயல் 

மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் ,என்ன செய்வதென்று
புரியாமல் கலங்கி நிற்கின்றனர்

பொறுப்பற்ற மத்திய அரசு தமிழ்நாடு அரசு அறிக்கை கிடைத்தவுடன்
மத்திய குழு பார்வையிட்டு நிதி வழங்கும் என்று அறிக்கை விடுகிறது

தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக மின் இணைப்புக்களை சரிசெய்து குடிநீர் வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது

அனைத்து சேதங்களுக்கும் முன்னுரிமை  அளித்து இழப்பீடு தொகைகளை அறிவித்துவருகிறது

சாலைகள் முழுவதுமாக அழிந்துவிட்டதால் எந்த உதவிகளும் பல நூறு கிராமங்களுக்கு பல நாட்களாகியும் போய் சேரவில்லை .

இந்தியாவில் பல மாநிலங்களில் ஆண்டுதோறும் புயல் தாக்கி சேதங்களை ஏற்படுத்தி வருவது வாடிக்கை .இது மாநில அரசுகளுக்கும் தெரியும் ,மத்திய அரசுக்கும் தெரியும்

தற்போதுள்ள அதி நவீன தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட இடத்திற்கு செல்லாமலே அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளும் வசதிகள் இருந்தும் அரசு நிர்வாகம் தூங்குகிறது

மொத்தமாக அழிந்துவிட்டபிறகு கணக்கெடுப்பு எதற்கு?

முதலில் உயிர் பிழைக்க உதவிகள் அளிக்கப்படவேண்டும் 
பிறகு பார்த்துகொள்ளலாம் மற்ற உதவிகளை 
.
வழக்கம்போல் எதிர்கட்சிகள் தங்கள் சுய விளம்பரதிற்க்காக 
தங்கள் பங்குக்கு இடங்களை பார்வையிடுவதும் 
ஆளும் கட்சிக்கே எதிராக அறிக்கைகள் விடுவதும் 
வழக்கமான ஒன்று.இப்போதும் அதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள் 
அதைத்தவிர அவர்களுக்கு வேறொன்றும் தெரியாது 
அவர்கள் என்றும் திருந்தபோவதும் கிடையாது .

அனைத்தையும் இழந்த மக்கள் தங்களை நிலைபடுத்தி கொள்ளும் வரை அவர்களுக்கு தினமும், உணவு, குடிநீர், மருத்துவ வசதி, தற்காலிக தங்கும் வசதி ஆகியவையே உடனடி தேவை.


முதலில் இந்த பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் 


இந்த பணியில் தொண்டு நிறுவனங்கள் பல ஈடுபட்டு வருவது பாராட்டுதலுக்குரியது  

அதை அரசு இயந்திரங்கள் உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்று மக்கள் எதிர்பார்கிறார்கள்

அதற்க்கு, ஹெலிகாப்டர்கள், ராணுவம், போன்ற வசதிகளை பயன்படுத்தி அரசு நிர்வாகங்கள் உடனடி நடவடிக்கையில் இறங்காவிடில் மக்களின் கோபம் எதில் போய் முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும்.


Monday, January 2, 2012

பெண்ணே எல்லாம் ஆவதும் உன்னாலே
அழிவதும் உன்னாலே 

பெண்ணே நீ தேவதை 
ஆம் தேவதையாய் இருக்கும் வரை ஆராதிக்கபடுவாய்
அதுவரை ஆராதிப்பவரையும் பாதுகாப்பாய்
நீயும் பாதுகாப்பாய் இருப்பாய்

ஆனால் நீ மானிடராய் பிறந்துவிட்டால் ?

மேடுகளும் பள்ளங்களும் கொண்ட வடிவம் நீ
உன் வாழ்க்கையும் அவ்வாறே மேடு பள்ளங்கள்
கொண்டதாக ஆகிவிட்டதோ?

உன் தோற்றமும் அழகு,பார்வை அழகு, பேச்சு அழகு, உன் செயல் அழகு
அனைத்தும் அழகே உருவெடுத்த நீ அனைவரையும் உன்பால்
கவர்ந்திழுக்கிறாய்

அதுவே உன் பலம் அதுவே உன் பலவீனம்

உன்னில் சிலர்  இந்த உலகை ஆட்டி படைக்கின்றனர்

ஆனால் உன்னில் பெரும்பான்மையினர் அல்லல்படுவதர்க்கே
பிறவி எடுத்துள்ளதை காணும்போது உள்ளத்தில் ரத்தம் வடிகிறது 

ரத்தம் செய்து பிரசவித்த உன் படைப்புகள் உன்னை போகபோருளாக கருதி உன்னை ரத்தம் கக்க செய்து உன் வாழ்க்கையை சீரழிக்கும் மிருகங்களை 
யார் திருத்துவது ?  

அதனால்தான் என்னவோ நீயே உன்னை உன் கருவில் இருக்கும்போதே கருக செய்து இவ்வுலகிற்கு வரவிடாமல் தடுத்துவிடுகிறாயோ? 

இந்தியர்களே எச்சரிக்கை

அந்நிய  நாட்டு வணிகர்களை இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதிப்பது பற்றி

வணிகம் செய்ய வந்த வெள்ளையர்கள் 
இங்குள்ள தேச துரோகிகளின் துணையோடு 
கொள்ளையர்களாக   மாறி
நம் நாட்டை கொள்ளையடித்து 
நம் நாட்டையே கைபற்றிகொண்டு
நம்மை அடிமைகளாக ஆக்கி
நம் கலாசாரத்தை சீரழித்து 
நாம் நாட்டு பாரம்பரியமான
விவசாய முறைகளையும்
சிறு தொழில்களையும் அழித்து 
நம் மக்களை வறுமைக்குள் தள்ளி
நம் உரிமைகளை பறித்து
நாம் முன்னேற விடாமல் 
பலவிதமான கொடுமையான 
சட்டங்களை போட்டு 
இருநூறு ஆண்டுகளுக்கு மேல் 
நம்மை துன்புறுத்திய ஆங்கிலேயர்களை 
மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் 
பல்லாயிரம் பேர் உயிர் தியாகம் 
செய்து பெற்ற சுதந்திரத்தை 
இழக்கும் விதமாக மீண்டும் அவர்களை 
நம் நாட்டில் வணிகம் செய்ய 
காங்கிரஸ் தலைமையிலான அரசு 
முடிவு எடுத்திருப்பது 
தற்கொலைக்கு சமானமானது 

இதன் காரணகர்த்தா யார் என்பதை அனைவரும் அறிவர் 

காந்தி இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு காங்கிரஸ் கட்சியை கலைத்து விட சொன்னதை அக்கட்சியில் உள்ள கொள்ளை கூட்டம் ஏற்க்க மறுத்ததின்  விளைவுதான் இன்று நம் நாடு சந்திக்கும்
தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளுக்கும் காரணம் 

இன்று ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடம் இல்லையே தவிர இன்னும்
அந்த கூட்டம் நம்மை அடிமைகளாக வைக்க ஆட்சி செய்த அதே
முறையைத்தான் இன்றளவும் இன்றைய ஆட்சியாளர்கள்  கடைபிடித்து வருகின்றனர்

நாட்டில் எங்கும் வறுமை, ஏழை மக்களை சுரண்டி வாழும் அதிகார வர்க்கம்
பாதுகாப்பின்மை மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ உறுதியற்ற சூழ்நிலை என எண்ணற்ற தீராத பிரச்சினைகள்

எனவே இந்திய மக்கள் இதற்க்கு அனுமதித்தால் அவர்களை காப்பாற்ற இன்னொரு காந்தி இப்போது பிறக்கமாட்டார். அதற்க்கு முன்னூறு அல்லது நானூறு ஆண்டுகள் ஆனாலும் ஆகலாம். 

ஏற்கெனவே பன்னாட்டு பன்னாடை நிறுவனங்கள்    நம் நாட்டில் உள்ள அனைத்து தொழில்களிலும் நுழைந்து பல லட்சம் கோடிகள் சுருட்டி கொண்டு
கொழித்து வருகின்றன

இந்தியர்களே எச்சரிக்கை