Tuesday, January 10, 2012

பாரதி அன்று: எங்கெங்கும் காணினும் சக்தியடா 

இன்று: எங்கெங்கும் காணினும் குப்பையடா


இன்று தமிழ்நாட்டில் குப்பைகள் இல்லாத இடமேயில்லை 
மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தனி தனியே பிரித்து போட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டும் அதை காற்றில் பறக்கவிட்டு விட்டு கண்ட இடங்களில் குப்பைகளை வீசி எறிவதில் நம் நாட்டு மக்களுக்கு இருக்கும் ஆனந்தம் வேறு எதுவும் இல்லை 


மக்கும் குப்பை எது மக்காத குப்பை எது என்று தமிழ் நாட்டு மக்குகளுக்கு (மக்களுக்கு) என்று புரியபோகிறதோ தெரியவில்லை 


முக்கியமாக அவர்கள் குப்பைகளை போட தேர்ந்தெடுக்கும் இடம் கழிவுநீர் கால்வாய்கள், குப்பை தொட்டிகளின் வெளிப்புறத்தில், பேருந்து மற்றும், ரயில் வண்டி பாதைகள், நிலையங்கள், ,என எல்லா இடங்களிலும் குப்பைகளை போடுவது அவர்கள் இயல்பு. 
படித்தவன், பாமரன் என அனைவரும் இந்த விஷயத்தில் ஒன்றாக செயல்படுவது பாராட்டத்தக்கது


இதனால் எல்லாஇடங்களிலும் கழிவு நீர்தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை எல்லா நேரங்களிலும் பதம் பார்க்கின்றன

மக்களை வீடுகளிலேயே முடக்கி வைக்கின்றன
ஜன்னல் கதவுகளை திறந்து இயற்க்கை காற்றை 
சுவாசிக்க வழியில்லை
கதவை திறந்தால் துர்நாற்றமதான் வீசுகிறது


கொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசு விரட்டிகளுக்காக
பல நூறு ரூபாய்களை மாதம்தோறும் அழவேண்டி உள்ளது


அதை தவிர நோய்களில் மாட்டிகொண்டு மருத்துவ செலவு 
பல ஆயிரங்கள் அழுதும் இந்த மனித ஜன்மங்கள் 
கொஞ்சம் கூட பாடம் கற்றுகொள்வதாக தெரியவில்லை

ஆனால் என்ன துன்பபட்டாலும் 
குப்பைகளை கண்ட இடங்களில் வீசி எறிந்து 
மகிழும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை
என்பது தமிழ் நாட்டு மக்களின் ஏகோபித்த  கருத்து 

No comments: