Wednesday, April 4, 2012

தயாராக இருக்கவும்

மின் கட்டண உயர்வு-தமிழ்நாடு

வரலாறு காணாத வகையில்
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

வழக்கம்போல் எதி(ரி) கட்சிகள்கள் 
தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்க போய்விட்டன

மக்கள் என்ன செய்வார்கள்? பாவம் 
அவர்களால் என்ன செய்ய முடியும்?

ஓசியில் மிக்ஸி  மின்விசிறி  தொல்லை காட்சிபெட்டி, 
இண்டஷேன்   அடுப்பு  வாங்கிவீட்டில் ஜம்பமாக 
வைத்து கொண்டதர்க்கு  தண்டனையாக 
மின் கட்டணத்தை செலுத்தி 
தொலைக்க வேண்டியதுதான்

நடுத்தர மக்கள் தரமற்ற மின்சாரத்தை 
பெற்றுக்கொண்டு தரமற்ற தொலைகாட்சி பெட்டிகளில் 
தரக்குறைவான காட்சிகளை கண்டு அழுதுகொண்டிருப்பதோடு 
மற்ற அறிவிப்புகளையும் ரசித்து கொண்டு மின் கட்டணத்தை 
அழுவதை தவிர வேறு வழியில்லை 
வீட்டில் மின்விசிறி,பிரிஜ் தொலைகாட்சி பெட்டி, ஏசி ,வாசிங் மச்சின் 
மாவு இயந்திரம், இச்டிரிபெட்டி, தண்ணி மோட்டார் , இண்டக்ஷேன் அடுப்பு, என ஏராளமான கருவிகளை வாங்கி வைத்துள்ளதால் மாதம்500யூனிட்டுக்களுக்கு கண்டிப்பாக ஆகும்.
எதையும் இனி நிறுத்த முடியாத முடியாது. எனவே வயிற்றில் ஈர துணியை போட்டு கொண்டு மின் கட்டணத்தை செலுத்த வேண்டியதுதான் 

பிரணாப் மாமா 12.அரை விழுக்காடு சேவை வரி எல்லாவற்றிலும் போட்டு நம்மையெல்லாம் குஷிபடுதி இருக்கிறார்


வாடகைக்கு குடியிருப்போர் இனி நடு தெருவுக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை

கையாலாகாத அரசியல்வாதி களை நம்மை மேய்க்க  அனுப்பி வைத்தால் அவர்கள் அரண்மனையில் உல்லாசமாக பவனி வருவதும், ஆடம்பரமான கார்களில் சுற்றி வந்து பந்தா காட்டுவதும் மக்களை ஏமாற்றி திரிவதும் வாடிக்கையாகிவிட்டது
.
இதற்க்கு காரணம் மக்கள் தங்கள் பிழைப்பு எப்படியாவது நடந்தால் போதும் என்று ஒவ்வொருவரும் நினைப்பதுதான். இந்த துன்பத்திற்கு காரணம் .

எல்லாவற்றையும் மொத்தமாக தண்டம் அழுதுவிட்டு மகிழ்ச்சியாக கோவணத்தை கட்டி கொண்டு கிளம்பிவிடலாம். தயாராக இருக்கவும்  

மின்சாரத்தை இலவசமாக வாரி இறைக்கும் இந்த அரசியல்வாதிகளால் ஆளப்படும் அரசுகள் வோட்டு வங்கிக்காக அதை என்றும் நிறுத்த போவதில்லை

தொடர்ந்து தரமான மின்சாரத்தை வழங்க எந்நேரமும் எல்லா பிரிவினருக்கும் வழங்க நடவடிக்கை அரசுகள் என்று எடுக்கும் என்று யாருக்கும் தெரியாது

மின்கட்டணத்தை ஒவ்வொரு மாதமும்  செலுத்த அரசு மக்களுக்கு 
உதவி செய்தால் 500 யூனிட்டுக்களுக்கு மேல் ஆகும் மின்சார அதிர்ச்சியிலிருந்து மக்கள் தப்பிக்க உதவியாய் இருக்கும்

இந்த உதவியையாவது மாண்புமிகு முதல்வர் செய்தால் மக்கள் அவரை வாழ்த்துவார்கள் 

செய்வாரா?

1 comment:

aanandam said...

we are always ready for such things