Tuesday, January 10, 2012

தமிழ்நாட்டை இரண்டு பேய்கள் பிடித்து ஆட்டுகின்றன

பேய்களை யார் ஒட்டுவார்கள் ?

தமிழ்நாட்டை இரண்டு பேய்கள் பிடித்து ஆட்டுகின்றன

ஒன்று கூடங்குளம் பேய்
மற்றொன்று முல்லை பெரியார் பேய் 

கூடங்குளம் பேயை தமிழ்நாட்டின் மீது ஏவியிருப்பவர்
உதயகுமார் என்னும் மந்திரவாதி

அவர் மகுடிக்கு கட்டுப்பட்டு அவருடன் 
சேர்ந்துகொண்டு சில மாதங்களாக 
பலநூறு பேய்கள் ஆடிக்கொண்டு இருக்கிறன 
திரும்ப திரும்ப அந்த பேய் அணு உலை ஆபத்தானது 
அதனால் மக்கள் மடிந்துவிடுவார்கள்,
எல்லாம் அழிந்துவிடும் என்று 
அந்த பேய் திரும்ப திரும்ப் 
சொல்லிகொண்டிருக்கிறது 

அந்த பேயை ஓட்ட மத்திய அமைச்சர் நாராயணசாமி,
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போன்றவர்கள்
முயற்சி செய்து தோற்று போய் 
அவர்கள் வேலையை 
பார்க்க போய்விட்டனர் 

அணுஉலை பேய் இன்னும்
பயங்கரமாக உறுமி கொண்டிருக்கிறது

பேயை விரட்ட தலைமை பூசாரியான தமிழக முதல்வர் 
அவர் கோரிக்கைகளுக்கு பிரதம  மந்திரி செவி சாய்க்காததால்
இந்த பேயை அதன் போக்கில் ஆட விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறார் 


மற்றொரு பேய் முல்லை பெரியார் அணை பேய்


அதை தமிழ்  நாட்டின் மீது ஏவி விட்டிருப்பவர் 
மலையாளா மாந்த்ரீக மந்திரவாதி உம்மன் சாண்டி

அணை உடைந்து விடும் அதனால் லட்ச கணக்கில் மக்கள் செத்துவிடுவார்கள் என்று கோயபெல்ல்ஸ் புளுகு மூட்டையை அவிழ்துவிட்டுகொண்டு ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறார்

அந்த பேயை ஓட்ட தமிழக முதல்வர்,
 முன்னாள் முதல்வர், 
எதிர் கட்சி தலைவர்கள், 
பொது மக்கள் என பலர் முயற்சி செய்தும்
 ஒன்றும் நடக்கவில்லை
சாண்டி பேய் நாளுக்கு நாள் சண்டித்தனம் 
செய்துகொண்டு நிலைமையை 
சிக்கலாக்கிகொண்டிருக்கிறது

அந்த பேயை அடக்கவேண்டிய 
பிரதம மந்திரி பேயுடன் கூட்டு சேர்ந்துகொண்டு 
களி சாப்பிட்டுகொண்டு கதகளியை ரசித்துகொண்டிருக்கிறார் 

பாவம் தமிழ்நாட்டு மக்கள் 
அவர்கள் என்ன செய்வார்கள் 
புலம்புவதை தவிர வேறு வழி இல்லை 

   

No comments: