Saturday, January 7, 2012

தொடர்ந்து மக்களை ஏமாற்றி மக்களை சுரண்டி வாழும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தால்தான் இந்தியா உருப்படும்

காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் அறிக்கை
 :
ஊழல் குற்றச்சாட்டால் மாயாவதி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பாபுசிங்  குஷ்வாகா காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்தார் ஆனால் ஊழல் கறை படிந்த எந்த ஒரு நபரையும் சேர்த்துக்கொள்ள  மாட்டோம் என்பதை அவரிடம் தெளிவாக தெரிவித்துவிட்டோம் அவர் சிறைக்கு செல்ல வேண்டியவர் இப்படிப்பட்ட நபரைத்தான் பா ஜ தலைவர்கள் .தங்களுடம் சேர்த்துக் கொண்டுள்ளனர்

போபோர்ஸ் பீரங்கி  ஊழலின் வாரிசுக்கு பிறந்தது
ஊழலை பற்றி  பேசுவது வேடிக்கையாக உள்ளது
ஒருவேளை எங்களிடமே ஏராளமான ஊழல் பேர்வழிகள் இருக்கிறார்கள் நீங்கள் வேறு எதற்கு என்று என்ற எண்ணத்தில் அப்படி சொல்லியிருக்கலாம்  

அலைகற்றை ஒதுக்கீட்டில் பல லட்சம் கோடி ருபாய் ஊழல் செய்து மாட்டிகொண்டு சில அமைச்சர்கள் கம்பி எண்ணி கொண்டிருக்கிரார்கள்
இன்னும் சிலர் உள்ளே போக போகிறார்கள்

பங்கு சந்தை ஊழல்,காமன்வெல்த் விளையாட்டு ஊழல்என்று ஏராளமான ஊழல்களின் ஊற்றுகண்ணான காங்கிரஸ் கட்சி ஆட்சியின் லட்சணம் உலகம் முழுவதும் சந்தி சிரித்து கொண்டிருக்கிறது

ஆண்ட அறுபது ஆண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றிய ஊழல்களின் மதிப்பு கணக்கிலடங்காதவை 

கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைத்துள்ள பணமும் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது

சில பேர் மாட்டிகொள்ளாமல் மேல்லோகம் போய்விட்டார்கள்

9ஆண்டுகளுக்கு முன் ஊழல் செய்து மாட்டிகொண்ட சுக்ராம் தற்போதுதான் சுகமாக கம்பி எண்ண போயிருக்கிறார்

தொடர்ந்து மக்களை ஏமாற்றி மக்களை சுரண்டி வாழும் காங்கிரஸ் கட்சி
ஒழிந்தால்தான் இந்தியா உருப்படும்




No comments: