Friday, January 6, 2012

தானே புயலுக்கு பின்னே?

தானே புயலுக்கு பின்னே?

புயல் அடித்து சென்று விட்டது
வாழ்வாதாரங்களை முழுவதுமாக சுவடு தெரியாமல் அழித்துவிட்டது

இன்னும் அதை நினைத்து புலம்புவதை மக்களும் நிறுத்தவேண்டும்
எதிர் கட்சிகளும்,ஊடகங்களும் நிறுத்தவேண்டும்

அரசை குறை கூறுவதை விட்டுவிட்டு எதிர்கட்சிகளும் ,ஊடகங்களும் அரசுடன் சேர்ந்து மக்களுக்கு உதவி செய்வதுதான் தற்போதைய 
கடமை. மற்ற அரிப்புகளை  தேர்தலின்போது வைத்துகொள்ளலாம் 


உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து மக்களின்
வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த குறுகிய மற்றும் நீண்ட கால
மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு துரிதப்படுத்த வேண்டும்

வெறும் நிதி மட்டும் வழங்கினால் அதில் பாதி லஞ்ச பேர்வழிகளுக்கும் மீதி டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கும், சாராய வியாபாரிகளுக்கும் போய்விடும் மீதி தொகையை மக்கள் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடுவார்கள். 

பயிர் வேலைகளை தொடங்க நிலம் மேம்பாடு,செய்ய,இடுபொருட்கள் வழங்க, மின் சக்தி வழங்க உடன் ஏறபாடு செய்ய வேண்டும் 


புயலால் விழுந்து போன ஆயிரகணக்கான மரங்களை அப்புறபடுத்த, வனத்துறையினரின் யானைகளையும் போகலைன்   இயந்திரங்களையும் பயன்படுத்தினால் விரைவில் இந்த பணியை முடிக்கலாம்



பார பட்சம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் தங்கள் இழந்த தொழிலை தொடங்க தேவையான உதவிகளை செய்ய வேண்டும்



No comments: