Monday, January 2, 2012

பெண்ணே எல்லாம் ஆவதும் உன்னாலே
அழிவதும் உன்னாலே 

பெண்ணே நீ தேவதை 
ஆம் தேவதையாய் இருக்கும் வரை ஆராதிக்கபடுவாய்
அதுவரை ஆராதிப்பவரையும் பாதுகாப்பாய்
நீயும் பாதுகாப்பாய் இருப்பாய்

ஆனால் நீ மானிடராய் பிறந்துவிட்டால் ?

மேடுகளும் பள்ளங்களும் கொண்ட வடிவம் நீ
உன் வாழ்க்கையும் அவ்வாறே மேடு பள்ளங்கள்
கொண்டதாக ஆகிவிட்டதோ?

உன் தோற்றமும் அழகு,பார்வை அழகு, பேச்சு அழகு, உன் செயல் அழகு
அனைத்தும் அழகே உருவெடுத்த நீ அனைவரையும் உன்பால்
கவர்ந்திழுக்கிறாய்

அதுவே உன் பலம் அதுவே உன் பலவீனம்

உன்னில் சிலர்  இந்த உலகை ஆட்டி படைக்கின்றனர்

ஆனால் உன்னில் பெரும்பான்மையினர் அல்லல்படுவதர்க்கே
பிறவி எடுத்துள்ளதை காணும்போது உள்ளத்தில் ரத்தம் வடிகிறது 

ரத்தம் செய்து பிரசவித்த உன் படைப்புகள் உன்னை போகபோருளாக கருதி உன்னை ரத்தம் கக்க செய்து உன் வாழ்க்கையை சீரழிக்கும் மிருகங்களை 
யார் திருத்துவது ?  

அதனால்தான் என்னவோ நீயே உன்னை உன் கருவில் இருக்கும்போதே கருக செய்து இவ்வுலகிற்கு வரவிடாமல் தடுத்துவிடுகிறாயோ? 

No comments: