Wednesday, January 4, 2012

மக்களின் துன்பங்களுக்கு யார் காரணம்?

மக்களின் துன்பங்களுக்கு யார் காரணம்?

மக்களா அல்லது 
மக்களை குழப்பும் அரசியல்வாதிகளா அல்லது
மக்களை ஆளும் அரசுகளா?

உண்மையில் மக்களின் துன்பங்களுக்கு காரணம் மக்களே

நம் நாடு சுதந்திரம் அடைந்த பின் 
எல்லாவற்றிற்கும் ஆளும் அரசுகளையும் அரசு இயந்திரங்களையும் 
குறை சொல்லுவதே இயல்பாகி போய்விட்டது

எதற்கெடுத்தாலும் அரசு இயந்திரத்தை எதிர்பார்ப்பதே 
தீராத வியாதிஆகிவிட்டது 

எந்த பிரச்சினைகளிலும் ஒருவொருக்கொருவர்
உதவி செய்து கொள்ளும் மனப்பான்மை செத்துவிட்டது

வெளியிலிருந்து உதவி கிடைக்கின்றவரை 
தங்களிடம் இருக்கின்றவற்றை 
இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் தூய 
மனப்பான்மை அடியோடு அற்று போய்விட்டது 

தங்களுக்கு தேவையானதை மட்டும்
வைத்துகொண்டு 
இல்லாதவர்க்கு வழங்குவதும் 
இருப்பதை அனைவரும் பகிர்ந்து கொண்டு 
வாழும் உத்தம குணம் இன்று யாரிடமும் இல்லை
  
சுயநலம் காரணமாக அரச வழங்கும் உதவிகளை 
அனைவருக்கும் பகிர்ந்து அளிக்காமல் 
ஒரு சிலரே அனுபவிப்பதால் 
பெரும்பாலான மக்கள் துன்பத்தில்
 சிக்கி தவிக்கிறார்கள்

பொதுமக்களிடம் பொறுமை இல்லை,
சகிப்புத்தன்மை இல்லை, 
நேர்மை இல்லை, ஒழுக்கம் இல்லை .
அதனால்தாம் மக்கள் தொடர்ந்து 
துன்பங்களை அனுபவிக்கிறார்கள் 

மக்களின் இந்த மனோபாவம் மாறவேண்டும்.
மாறினால்தான் அனைவருக்கும் நல்லது
இல்லையேல் அவர்களும் நிம்மதியாக வாழமுடியாது
அவர்களை ஆளும் அரசுகளும் நல்ல அரசாட்சியை வழங்க முடியாது.

No comments: